23 649c46df9126f 2
உலகம்செய்திகள்

பயணத்தை தொடங்கியது உலகின் மிகப்பெரிய கப்பல்: இயற்கை ஆர்வலர் வெளிப்படுத்தும் கவலை

Share

பயணத்தை தொடங்கியது உலகின் மிகப்பெரிய கப்பல்: இயற்கை ஆர்வலர் வெளிப்படுத்தும் கவலை

உலகின் மிகப்பெரிய பயணக் கப்பல் தன்னுடைய முதல் பயணத்தை தொடங்கியது.

உலகின் மிகப்பெரிய பயணக் கப்பலான “ராயல் கரீபியன் ஐகான் ஆஃப் சீ” (Royal caribbean’s Icon of the Seas) புளோரிடாவின் மியாமி-யில் இருந்து சனிக்கிழமை புறப்பட்டது.

இந்த கப்பலில் மொத்தமாக 7,600 பயணிகள் மற்றும் 2,350 கப்பல் குழு உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் பயணிக்க முடியும். 1,200 அடி(365 மீ) நீளம் கொண்ட ராயல் கரீபியன் பயணக் கப்பல் 20 தளங்களில் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கப்பலில் 7 நீச்சல் குளங்கள், 6 நீர் சரிவுகள், திரையரங்குகள், 40க்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் மதுபான கூடங்கள் உள்ளன.

ராயல் கரீபியன் பயணக் கப்பலானது 7 நாட்கள் கொண்ட தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளது.

இந்த கப்பலானது திரவ மயமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் சக்தியூட்டப்பட்ட இரட்டை எரிபொருள் எஞ்சின் கொண்டு இயக்கப்படுகிறது.

மாற்றி எரிபொருளானது பசுமை வாயுக்கள் மற்றும் சல்பர் வெளியேற்றத்தை குறைப்பதாக குரூஸ் லைன்ஸ் இன்டர்நேஷனல் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.

இருப்பினும், கப்பலில் ஆபத்தான மீத்தேன் வெளியேற்றம் அதிகரிக்கிறது என்று இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
24 669df6417f6df
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர சுமார்...

images 3 3
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: மூளையாகச் செயல்பட்ட இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக பெண் சட்டத்தரணி கைது

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலைக்கு மூளையாகச் செயற்பட்டதாகக் கருதப்படும் இஷாரா...

images 1 9
செய்திகள்இலங்கை

கென்யாவில் சிறிய ரக விமானம் விபத்து: 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

கென்யாவின் கடற்கரைப் பகுதியிலிருந்து பயணித்த ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து...

images 3 2
இலங்கைசெய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்: 2026 வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக அமையும் என எதிர்பார்ப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை...