23 649c46df9126f 2
உலகம்செய்திகள்

பயணத்தை தொடங்கியது உலகின் மிகப்பெரிய கப்பல்: இயற்கை ஆர்வலர் வெளிப்படுத்தும் கவலை

Share

பயணத்தை தொடங்கியது உலகின் மிகப்பெரிய கப்பல்: இயற்கை ஆர்வலர் வெளிப்படுத்தும் கவலை

உலகின் மிகப்பெரிய பயணக் கப்பல் தன்னுடைய முதல் பயணத்தை தொடங்கியது.

உலகின் மிகப்பெரிய பயணக் கப்பலான “ராயல் கரீபியன் ஐகான் ஆஃப் சீ” (Royal caribbean’s Icon of the Seas) புளோரிடாவின் மியாமி-யில் இருந்து சனிக்கிழமை புறப்பட்டது.

இந்த கப்பலில் மொத்தமாக 7,600 பயணிகள் மற்றும் 2,350 கப்பல் குழு உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் பயணிக்க முடியும். 1,200 அடி(365 மீ) நீளம் கொண்ட ராயல் கரீபியன் பயணக் கப்பல் 20 தளங்களில் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கப்பலில் 7 நீச்சல் குளங்கள், 6 நீர் சரிவுகள், திரையரங்குகள், 40க்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் மதுபான கூடங்கள் உள்ளன.

ராயல் கரீபியன் பயணக் கப்பலானது 7 நாட்கள் கொண்ட தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளது.

இந்த கப்பலானது திரவ மயமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் சக்தியூட்டப்பட்ட இரட்டை எரிபொருள் எஞ்சின் கொண்டு இயக்கப்படுகிறது.

மாற்றி எரிபொருளானது பசுமை வாயுக்கள் மற்றும் சல்பர் வெளியேற்றத்தை குறைப்பதாக குரூஸ் லைன்ஸ் இன்டர்நேஷனல் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.

இருப்பினும், கப்பலில் ஆபத்தான மீத்தேன் வெளியேற்றம் அதிகரிக்கிறது என்று இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 68f4d447e68d6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த: சம்பந்தன் உள்ளிட்ட முக்கிய நபர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் மேல் நீதிமன்றங்களாக மாற்றம்!

ஊழல் எதிர்ப்பு தேசிய செயல் திட்டத்தை (2025–2029) வலுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கொழும்பு 7...

images 2 4
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

பொத்துவில் முஹுது மஹா விகாரைக்கு இந்திய உயர்ஸ்தானிகர் விஜயம்: தொல்லியல் இடங்களைப் பாதுகாக்க கோரிக்கை

பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முஹுது மஹா விகாரையை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா...

25 68ff93f31cee3
செய்திகள்இலங்கை

வெலிகம துப்பாக்கிச் சூடு: கைதானவர் குறித்த காணொளி பதிவு – காவல்துறை அதிகாரிகள் மீது சிறப்பு விசாரணை ஆரம்பம்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேக...

25 68ef777f06ff0
இலங்கைசெய்திகள்

அவிசாவளை நீதிமன்றத்தில் போலித் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற பெண் கைது: விளக்கமறியலில் உத்தரவு

போலித் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த நிலையில், அவிசாவளை நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற பெண் ஒருவரைப்...