tamilnih 3 scaled
உலகம்செய்திகள்

மூன்றாம் உலகப்போரின் விளிம்பில் உலகம்

Share

மூன்றாம் உலகப்போரின் விளிம்பில் உலகம்

தற்கால ஆயுதங்கள் காரணமாக உலகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் ஆபத்தில் உள்ளதாகவும், மூன்றாம் உலகப்போர் உருவாகும் எனவும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவில் பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகம் மூன்றாம் உலகப்போரின் விளிம்பில் உள்ளது. ஆனால் மூன்றாம் உலகப்போரை தன்னால் மட்டுமே தடுக்க முடியும். அந்த போர் சாதாரண போர்களைப் போலிருக்காது. நவயுக ஆயுதங்கள் காரணமாக மூன்றாம் உலகப்போரால் முழுமையாக அழிவு ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

மூன்றாம் உலகப்போர் நெருங்குகின்றது. தற்கால ஆயுதங்கள் காரணமாக உலகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் ஆபத்தில் உள்ளது.

மூன்றாம் உலகப்போரைத் தடுக்க தன்னால் மட்டுமே முடியும். அத்துடன், தான் தற்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்திருந்தால் உக்ரைன், ரஷ்யப் போர் உட்பட பல முரண்பாடுகளைத் தன்னால் தவிர்த்திர்க்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...