உலகம்செய்திகள்

உலகிலேயே மிகப் பழமையான பாண் துண்டு கண்டுபிடிப்பு

Share
tamilni 225 scaled
Share

உலகிலேயே மிகப் பழமையான பாண் துண்டு கண்டுபிடிப்பு

துருக்கிய தொல்பொருள் ஆராய்ச்சியொன்றின் போது உலகின் பழமையான பாண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன்போது, 8600 ஆண்டுகள் பழமையான அந்த பாண் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

அது, தெற்கு துருக்கியின் கொன்யா மாகாணத்தில் உள்ள Katalyouk தொல்பொருள் தளத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பண்டைய பாணின் கண்டுபிடிப்பு அசாதாரணமானது என்றும் இது உலகின் பழமையான பாண் எனவும் துருக்கியின் அனடோலு பல்கலைக்கழகத்தின் அகழ்வாராய்ச்சிக் குழுவின் தலைவரான தொல்பொருள் ஆய்வாளர் அலி உமுத் துர்கன் தெரிவித்துள்ளார்.

இந்த கண்டுபிடிப்பானது, பண்டைய கால மக்களின் உணவுப் பழக்கம் மற்றும் அக்கால நாகரிகத்திற்கான தடயங்களைத் எடுத்துக் காட்டுவதாக கூறப்படுகிறது.

கண்டுபிடிக்கப்பட்ட பாண், உருண்டையாகவும், தடிமனாகவும், மென்மையான பொருளால் நிரப்பப்பட்டதாக காணப்பட்டுள்ளது.

மேலும், பாண் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் கோதுமை, பார்லி, பட்டாணி என்பனவும் காணப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...