tamilnif 2 scaled
உலகம்செய்திகள்

பூமியை தாக்கவுள்ள சூரியப் புயல்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Share

பூமியை தாக்கவுள்ள சூரியப் புயல்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பூமியை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு மிகப்பெரிய சூரியப் புயல் தாக்கவுள்ளது.

இந்த சூரியப் புயலின் தாக்குதல்களை எதிர்நோக்க தற்போது நாசா தயாராகி வருகிறது.

சூரியப் புயல் விரைவில் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், சூரிய சிகரம் ஒரு மூலையில் உள்ளது என்பது தெளிவாவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

வானில் எரிந்து கொண்டிருக்கும் சூரியனில் அவ்வப்போது, வெடிப்பு ஏற்பட்டு சூரியப் புயலாக (Solar Storm) வெளிப்படும்.

சூரியனின் இந்த செயல்பாட்டை புரிந்து கொள்வது முக்கியமானது. ஏனென்றால், இவை பூமியின் ஈர்ப்பு மண்டலத்தில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன.

புவியின் சுற்றுப் பாதையில் உள்ள செயற்கை கோள்கள், ஜிபிஎஸ் சிக்னல்கள், தொலை தூர ரேடியோ தகவல் தொடர்பு மற்றும் மின் தொகுப்புகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த நிலையில், தற்போது விண்வெளி ஏஜென்சியின் பார்க்கர் சோலார் ப்ரோப் இதனைப் பற்றி ஆய்வு செய்துள்ளது.

இந்த ஆய்வில் “இணைய பேரழிவு” பற்றி அவர்கள் விவரித்துள்ளதுடன், சூரிய புயலின் போது, ​​சூரியனில் இருந்து வரும் காந்தப்புலங்கள் பூமியின் வளிமண்டலத்தில் பாரிய மின்னோட்டத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பிர் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “கரோனல் மாஸ் எஜெக்ஷன்ஸ் எனப்படும் இந்த வெடிப்புகள் மணிக்கு 11,000,000 கிலோமீட்டர் வேகத்தில் பூமிக்கு வரும்.

இவை வாரத்திற்கு 20 முறை பூமியை நோக்கி வருகிறது. இவை 2025 ஆம் ஆண்டில் பூமியைத் தாக்கும் என்று நாசா தகவல் தெரிவித்துள்ளது.

இந்த சூரிய புயல் இப்போது தாக்கப்பட்டால், செயற்கைக்கோள்களில் எலக்ட்ரானிக்ஸ் கடுமையாக சேதமடையலாம். அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்.

அத்துடன், இந்த சூரிய புயலால் நீண்ட தூர இணைப்புக்கு முக்கியமான நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பு கேபிள்கள் கூட பாதிக்கப்படலாம்.

துருவங்களுக்கு அருகிலுள்ள பகுதிகள், இணைய உள்கட்டமைப்பின் பெரும்பகுதி ஆகியவைகள் இந்த நிகழ்வுகளால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை.

இன்றைக்கு உலகத்தில் எல்லாமே செயற்கைக்கோள் பயன்பாடு வழியாக தான் செயல்படுகிறது. இந்த சூழலில் செயற்கைக்கோள் பாதிப்பு அடைந்தால் அது சார்ந்த பிரச்சினைகளையும் நாம் எதிர்கொள்ளும் நிலை வரும். இணையமே இல்லாத நிலை கூட உருவகலாம்” என எச்சரித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...