France 1
உலகம்செய்திகள்

கணவர், காதலனால் கொலை செய்யப்படும் பெண்கள்!!

Share

பிரான்ஸ் நாட்டில் பெண்கள் அவர்களது கணவர்கள், காதலர்களால் கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் உறுதியான நடவடிக்கை எடுப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டைப் பொறுத்தவரைக்கும், நாளுக்கு நாள் குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருவதாக அங்குள்ள பெண்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு மட்டும் 100 பெண்கள் அவர்களது துணைகள் (கணவர்கள், காதலர்கள்) அல்லது முன்னாள் துணைகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் புத்தாண்டு பிறந்த நேரத்தில் மட்டும் 3 பெண்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

புத்தாண்டு நேரத்தில் 27 வயது பெண் ஒருவர் இராணுவ அதிகாரியான தனது காதலரால் கொலை செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, 113 பெண்கள் கடந்த வருடத்தில் மட்டும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களைக் கண்டுக்கொள்ளாமல் அமைதியாக இருப்பதாக முறைப்பாடுகள் எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...