tamilni 435 scaled
உலகம்செய்திகள்

பல கோடி சொத்துக்களை செல்லப்பிராணிகளுக்கு எழுதி வைத்த பெண்

Share

பல கோடி சொத்துக்களை செல்லப்பிராணிகளுக்கு எழுதி வைத்த பெண்

சீனாவில் மூதாட்டியொருவர் தனது பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை தான் வளர்க்கும் நாய் மற்றும் பூனைக்கு எழுதி வைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, சீனா – ஷாங்காய் நகரை சேர்ந்தவர் லியூ என்ற மூதாட்டியே இவ்வாறு தனது சொத்துக்களை எழுதி வைத்துள்ளார்.

குறித்த மூதாட்டி தனக்கு சொந்தமான சுமார் 23 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்களை முதலில் தனது 3 குழந்தைகளும் பங்கீடும் வகையில் உயில் எழுதி வைத்துள்ளார்.

இந்நிலையில் அந்த மூதாட்டி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதையடுத்து அவரது குழந்தைகள் மூவரும் அவரை புறக்கணித்தமை அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கோபமடைந்த அடைந்த அவர் தனது சொத்து மதிப்புக்கள் அனைத்தையும் தான் வளர்க்கும் நாய் மற்றும் பூனைக்கு எழுதி வைத்துள்ளார்.

இதையறிந்த அவரது குழந்தைகள் அதிர்ச்சியடைந்துள்ளதுடன் அவர்கள் நம்பிக்கையான ஒருவரை தேர்ந்தெடுத்து கால்நடை மருத்துவமனை ஆரம்பித்து நாயையும், பூனையையும் நன்கு பராமரிக்க ஒரு விலங்குகள் நல நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...