உலகம்செய்திகள்

60 ஆண்டுகளாக உலோக நுரையீரல் உதவியுடன் வாழ்ந்துவந்த பெண்: மின் தடையால் உயிரிழந்த சோகக் கதை

Share

60 ஆண்டுகளாக உலோக நுரையீரல் உதவியுடன் வாழ்ந்துவந்த பெண்: மின் தடையால் உயிரிழந்த சோகக் கதை

மூன்று வயதில் போலியோ என்னும் கொடிய நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், சுமார் 60 ஆண்டுகளாக இயந்திரம் ஒன்றின் உதவியுடன் வாழ்ந்துவந்த நிலையில், ஒரு நாள் திடீரென ஏற்பட்ட மின் தடை அவர் உயிரிழக்கக் காரணமாக அமைந்துவிட்டிருக்கிறது.

அமெரிக்காவின் Tennesseeயில் பிறந்த டயான் (Dianne Odell) என்னும் பெண்ணுக்கு மூன்று வயது இருக்கும்போது, அவரை போலியோ என்னும் கொடிய நோய் தாக்கியுள்ளது.

உலோக நுரையீரல் என்று அழைக்கப்படும் ஒரு இயந்திரத்தின் உதவியுடனேயேதான் அவர் வாழ்ந்துவந்துள்ளார்.

அப்படி ஒரு சூழலில் 60 ஆண்டுகள் வாழ்ந்தும், மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்த டயான், தன்னை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியுடன் வைத்திருப்பாராம். தனது இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடியின் உதவியுடன் விருந்தினர்களுடன் உரையாடுவது, காற்று ஊதுவதன் மூலம் தொலைக்காட்சியை இயக்கும் ஒரு குழாயின் உதவியுடன் தொலைக்காட்சியையும் பார்த்துக்கொண்டு, ஒலி எழுப்பும் ஒரு கணினி உதவியுடன் பேசிக்கொண்டு என மகிழ்ச்சியாகவே இருப்பாராம் டயான்.

ஆனால், 2008ஆம் ஆண்டு, மே மாதம், டயானுக்கு 61 வயது இருக்கும்போது, ஒருமுறை மின் தடை ஏற்பட, அவரது நுரையீரலுக்குள் காற்றை செலுத்த பயன்படுத்தும் இயந்திரம் செயல்படாமல் போயிருக்கிறது.

அவரது குடும்பத்தினர் எவ்வளவு முயற்சித்தும், அவசர உதவிக்காக வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர்களையும் கை பம்புகளை பயன்படுத்தி முயற்சி செய்தும் அவரது சுவாசத்தை அவர்களால் சரி செய்ய இயலாமல் போயுள்ளது.

Share
தொடர்புடையது
z p00 Namal Rajapaksa
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கொலைகள் அதிகரிப்பு குறித்து நாமல் ராஜபக்ஷ கவலை: சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டை இழக்கிறது!

இலங்கையில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் கொலைக் சம்பவங்கள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற...

23 63baa36d78977
இலங்கைசெய்திகள்

பலப்படுத்தப்பட்ட இரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு – பாதுகாப்பு அமைச்சரின் வேண்டுகோள் .

நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்கு நேற்று முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுத்தப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம்...

licence 1200px 2023 10 18
செய்திகள்இலங்கை

ஓட்டுநர் உரிமக் கட்டணத் திருத்தம் குறித்து இறுதி முடிவு இல்லை

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க அவர்கள், சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணத் திருத்தம் தொடர்பில்...

image 9f55943f1b 1
செய்திகள்இலங்கை

“மயானத்திலிருந்து மக்கள் சேவையா..!”: சஜித் பிரேமதாசவின் அறிக்கை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், “மயானத்தில் இருந்து கொண்டு மக்கள் சேவை செய்ய முடியாது....