உக்ரைன் ஊடுருவலை விமர்சித்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை! விஷம் காரணமா?
உலகம்செய்திகள்

உக்ரைன் ஊடுருவலை விமர்சித்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை! விஷம் காரணமா?

Share

உக்ரைன் ஊடுருவலை விமர்சித்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை! விஷம் காரணமா?

உக்ரைன் ஊடுருவலை விமர்சித்த பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாமா என்பது குறித்து ஜேர்மன் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகிறார்கள்.

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைக் கடுமையாக விமர்சித்து கட்டுரைகள் எழுதி வந்த ரஷ்ய ஊடகவியலாளர் Elena Kostyuchenko.

Elena உக்ரைனிலுள்ள மரியூபோல் நகரிலிருந்து செய்தி சேகரித்துவந்த நிலையில், ரஷ்யர்கள் அவரைக் கொலை செய்யமுயற்சி செய்வதாக உக்ரைன் ராணுவ தரப்பிலிருந்து துப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, ஜேர்மன் தலைநகர் பெர்லினுக்குத் தப்பிவந்தார் அவர்.

மீண்டும் செய்தி சேகரிப்பதற்காக உக்ரைன் செல்வதற்காக, விசாவுக்காக ஜேர்மனியின் Munich நகருக்குப் பயணித்த Elena, ரயிலில் மீண்டும் பெர்லினுக்குத் திரும்பும்போது, திடீரென அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தோன்றத் துவங்கியுள்ளன.

கடும் தலைவலி, தளர்ச்சி, மூச்சுத்திணறல் மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது Elenaவுக்கு. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Elenaவுக்கு கல்லீரல் என்சைம்கள் திடீரென ஐந்து மடங்கு அதிகரித்திருந்தது தெரியவந்தது. அத்துடன், அவரது சிறுநீரில் இரத்தமும் வெளியேறியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஜேர்மன் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டார்கள். இடையில் அந்த விசாரணை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தற்போது அந்த விசாரணை துவக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...