உக்ரைன் ஊடுருவலை விமர்சித்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை! விஷம் காரணமா?
உலகம்செய்திகள்

உக்ரைன் ஊடுருவலை விமர்சித்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை! விஷம் காரணமா?

Share

உக்ரைன் ஊடுருவலை விமர்சித்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை! விஷம் காரணமா?

உக்ரைன் ஊடுருவலை விமர்சித்த பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாமா என்பது குறித்து ஜேர்மன் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகிறார்கள்.

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைக் கடுமையாக விமர்சித்து கட்டுரைகள் எழுதி வந்த ரஷ்ய ஊடகவியலாளர் Elena Kostyuchenko.

Elena உக்ரைனிலுள்ள மரியூபோல் நகரிலிருந்து செய்தி சேகரித்துவந்த நிலையில், ரஷ்யர்கள் அவரைக் கொலை செய்யமுயற்சி செய்வதாக உக்ரைன் ராணுவ தரப்பிலிருந்து துப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, ஜேர்மன் தலைநகர் பெர்லினுக்குத் தப்பிவந்தார் அவர்.

மீண்டும் செய்தி சேகரிப்பதற்காக உக்ரைன் செல்வதற்காக, விசாவுக்காக ஜேர்மனியின் Munich நகருக்குப் பயணித்த Elena, ரயிலில் மீண்டும் பெர்லினுக்குத் திரும்பும்போது, திடீரென அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தோன்றத் துவங்கியுள்ளன.

கடும் தலைவலி, தளர்ச்சி, மூச்சுத்திணறல் மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது Elenaவுக்கு. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Elenaவுக்கு கல்லீரல் என்சைம்கள் திடீரென ஐந்து மடங்கு அதிகரித்திருந்தது தெரியவந்தது. அத்துடன், அவரது சிறுநீரில் இரத்தமும் வெளியேறியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஜேர்மன் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டார்கள். இடையில் அந்த விசாரணை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தற்போது அந்த விசாரணை துவக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...