பிரித்தானிய சிறுமி கொலை வழக்கில் வெளியான புதிய தகவல்
உலகம்செய்திகள்

பிரித்தானிய சிறுமி கொலை வழக்கில் வெளியான புதிய தகவல்

Share

பிரித்தானிய சிறுமி கொலை வழக்கில் வெளியான புதிய தகவல்

பிரித்தானியாவில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை உட்பட மூவருக்கு தொடர்பிருப்பதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

ஹார்சல் பகுதியில் குடியிருப்பு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி சாரா ஷெரீப் வழக்கில் அவரது தந்தைக்கும் தொடர்பிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நாட்டைவிட்டு வெளியேறியதாக கூறப்படும் மூவரும், சிறுமி சாரா ஷெரீபுக்கு நன்கு அறிமுகமானவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை அதிகாலை 2.50 மணியளவில் அவர்கள் சென்றபோது வேறு யாரும் அந்த குடியிருப்பில் இருக்கவில்லை என்று சர்ரே பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், முறையான அடையாளம் காணு நடவடிக்கைகள் இன்னும் நடைபெறவில்லை எனவும்,

செவ்வாய்க்கிழமை பிற்பகல் உடற்கூறு ஆய்வுகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். சிறுமி சாராவின் தாயார் ஓல்கா ஷெரீப் தெரிவிக்கையில், எனது வாழ்க்கை இனி முன்பு போல ஒருபோதும் இருக்காது. சாரா இப்போது என்னுடன் இருக்க வேண்டியவள் என கண்கலங்கியுள்ளார்.

நீதிமன்றமூடாக மகள் சாராவின் மொத்த உரிமையும் தமது முன்னாள் கணவர் உர்ஃபான் ஷெரீப் கைப்பற்றியதாக ஓல்கா தெரிவித்துள்ளார். போலந்தில் பிறந்தவரான ஓல்கா, தமது ஒரே மகளின் மரணத்திற்கு பின்னர் தூக்கத்தை தொலைத்தவராக அவதிப்பட்டு வருகிறார்.

உள்ளூர் டாக்சி சாரதியான உர்ஃபான் ஷெரீப்பை 2009ல் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ள ஓல்கா, 2017ல் விவாகரத்து பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் ஒருமுறை கூட மகள் சாராவை சந்தித்ததில்லை என கூறும் ஓல்கா, தற்போது அவள் மரணமடைந்த தகவல் கேட்டு நொறுங்கிப்போனதாக தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...