பிரித்தானிய சிறுமி கொலை வழக்கில் வெளியான புதிய தகவல்
உலகம்செய்திகள்

பிரித்தானிய சிறுமி கொலை வழக்கில் வெளியான புதிய தகவல்

Share

பிரித்தானிய சிறுமி கொலை வழக்கில் வெளியான புதிய தகவல்

பிரித்தானியாவில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை உட்பட மூவருக்கு தொடர்பிருப்பதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

ஹார்சல் பகுதியில் குடியிருப்பு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி சாரா ஷெரீப் வழக்கில் அவரது தந்தைக்கும் தொடர்பிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நாட்டைவிட்டு வெளியேறியதாக கூறப்படும் மூவரும், சிறுமி சாரா ஷெரீபுக்கு நன்கு அறிமுகமானவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை அதிகாலை 2.50 மணியளவில் அவர்கள் சென்றபோது வேறு யாரும் அந்த குடியிருப்பில் இருக்கவில்லை என்று சர்ரே பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், முறையான அடையாளம் காணு நடவடிக்கைகள் இன்னும் நடைபெறவில்லை எனவும்,

செவ்வாய்க்கிழமை பிற்பகல் உடற்கூறு ஆய்வுகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். சிறுமி சாராவின் தாயார் ஓல்கா ஷெரீப் தெரிவிக்கையில், எனது வாழ்க்கை இனி முன்பு போல ஒருபோதும் இருக்காது. சாரா இப்போது என்னுடன் இருக்க வேண்டியவள் என கண்கலங்கியுள்ளார்.

நீதிமன்றமூடாக மகள் சாராவின் மொத்த உரிமையும் தமது முன்னாள் கணவர் உர்ஃபான் ஷெரீப் கைப்பற்றியதாக ஓல்கா தெரிவித்துள்ளார். போலந்தில் பிறந்தவரான ஓல்கா, தமது ஒரே மகளின் மரணத்திற்கு பின்னர் தூக்கத்தை தொலைத்தவராக அவதிப்பட்டு வருகிறார்.

உள்ளூர் டாக்சி சாரதியான உர்ஃபான் ஷெரீப்பை 2009ல் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ள ஓல்கா, 2017ல் விவாகரத்து பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் ஒருமுறை கூட மகள் சாராவை சந்தித்ததில்லை என கூறும் ஓல்கா, தற்போது அவள் மரணமடைந்த தகவல் கேட்டு நொறுங்கிப்போனதாக தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 95099f5203
செய்திகள்இலங்கை

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வன்னி மாவட்ட எம்.பி. ரவிகரன்: வரவு செலவுத் திட்ட அமர்வுக்கு மத்தியில் உணர்வெழுச்சி!

தேச விடுதலைக்காகப் போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21)...

images 1 11
செய்திகள்இலங்கை

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தினோம்: சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் பணியவில்லை – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

image e0f1498f29
செய்திகள்இலங்கை

தமிழ் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்: வேலணை சாட்டி துயிலும் இல்லத்தில் ஈகச் சுடரேற்றல் நிகழ்வு!

தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப...

Archchuna Ramanathan 1200px 24 11 22
செய்திகள்அரசியல்இலங்கை

பாராளுமன்ற உணவகத்தில் எம்.பி.க்கு கொலை மிரட்டல்: முஹம்மட் பைசல் மீது அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால், இன்று (நவ 21)...