2 2 scaled
உலகம்செய்திகள்

முட்டுக்கட்டையாக இளவரசர் வில்லியம்… ஹரி அரண்மனை திரும்ப வாய்ப்பே இல்லை: வெளிவரும் புதிய தகவல்

Share

முட்டுக்கட்டையாக இளவரசர் வில்லியம்… ஹரி அரண்மனை திரும்ப வாய்ப்பே இல்லை: வெளிவரும் புதிய தகவல்

அரச குடும்பத்திற்கு திரும்பும் இளவரசர் ஹரியின் எண்ணம் இனி ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை என அரண்மனை வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

சார்லஸ் மன்னரின் நோயை காரணமாக குறிப்பிட்டு அரண்மனைக்கு திரும்பும் ஹரியின் அனைத்து முயற்சிகளையும் முறியடிக்க இருப்பதாக இளவரசர் வில்லியம் தமது நண்பர்களிடம் கூறியுள்ளார்.

தேவை ஏற்பட்டால், மேலதிக பொறுப்புகளை ஏற்கவும் தாம் தயாராக இருப்பதாகவும் வில்லியம் அறிவித்துள்ளார். 2020ல் அரண்மனை பொறுப்புகளில் இருந்து விலகிச் சென்ற இளவரசர் ஹரி,

தற்போது தந்தையின் நிலை அறிந்து மீண்டும் அரண்மனைக்கு திரும்பவும், பொறுப்புகளை ஏற்கவும் தயாராக இருப்பதாக தகவல் கசிந்துள்ள நிலையிலேயே வேல்ஸ் இளவரசர் வில்லியம் தமது நண்பர்களிடம் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் லண்டன் திரும்பிய இளவரசர் ஹரி, சார்லஸ் மன்னருடன் தனிப்பட்ட சந்திப்பை முன்னெடுத்ததுடன், மகிழ்ச்சியுடன் அமெரிக்கா திரும்பியதாகவும் கூறப்பட்டது.

ஆனால், ஹரி மீண்டும் அரண்மனைக்கு திரும்புவதை வில்லியம் ஏற்க வாய்ப்பில்லை என்றும், அவர் ஒருபோதும் அதை அனுமதிக்கப் போவதில்லை என்றும் அரண்மனை வட்டாரத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது ரத்த பந்தமான சகோதரரை நம்பினாலும், இனிமேலும் அவர் மேகனை நம்ப தயாராக இல்லை என்றே தகவல் கசிந்துள்ளது. எந்த கட்டாயத்தின் பேரிலும், ஹரி அரண்மனைக்கு திரும்புவதை வில்லியம் அனுமதிக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...