27 4
உலகம்செய்திகள்

ஐபிஎல் போட்டிகள் முழுமையாக நிறுத்தம்..!

Share

இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் நேற்று வியாழக்கிழமை நடைபெறவிருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி, ஜம்மு மற்றும் பதன்கோட்டில் மேற்கொள்ளப்படும் என்று விடுக்கப்பட்ட விமானத் தாக்குதல் எச்சரிக்கையைத் தொடர்ந்து பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது,

இந்தநிலையில்; இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தொடர்ந்து மோதல் இடம்பெற்று வருகின்றமையால், ஐபிஎல்லின் முழு போட்டிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

போட்டிகளில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்களால் பாதுகாப்பு கவலைகள் எழுப்பப்பட்ட நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இது தொடர்பில் அறிவித்துள்ளது.

முன்னதாக, நேற்று பஞ்சாப் அணி 10.1 ஓவர்களில் 1 விக்கெட்டுக்கு 122 ஓட்டங்களை எடுத்திருந்தபோது, திடீரென்று மின்சார விளக்குகள் அணைந்தன.

இதனையடுத்து, அணிகளின் வீரர்களும் பார்வையாளர்களும் பாதுகாப்பு கருதி மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த மைதானத்தின் கொள்ளளவு 23,000 பேர் என்ற நிலையில், வெளியேற்றப்பட்டபோது சுமார் 80 சதவீத இரசிகர்கள் அங்கு கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....