25 6862698bcbd0f
உலகம்செய்திகள்

பிரான்சின் பெரும்பாலான பகுதிகளுக்கு வெப்ப அலை எச்சரிக்கை

Share

பிரான்சின் 101 நிர்வாகப் பகுதிகளில் 84 பகுதிகளுக்கு திங்கள்கிழமை முதல் வாரத்தின் நடுப்பகுதி வரை வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோடைகாலத்தின் துவக்கத்தில் ஏற்படும் காட்டுத்தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் தயாராகிவருகிறார்கள்.

தென்மேற்கு பிரான்சில் உள்ள Corbieres பகுதியில் காட்டுத்தீ உருவானதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியிலிருந்தவர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

வெள்ளிக்கிழமை நாட்டின் தெற்கில் தொடங்கிய கடுமையான வெப்பநிலை திங்கட்கிழமைக்குள் கிட்டத்தட்ட பிரான்ஸ் முழுவதும் பரவியிருக்கும், மத்தியதரைக் கடலில் அதிகபட்சமாக 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அனைத்து வழிகாட்டுதல்களையும், குறிப்பாக சுகாதாரம் தொடர்பான வழிகாட்டுதல்களையும் மறுஆய்வு செய்வதற்காக வெப்ப அலை குறித்த நெருக்கடி கூட்டம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கூட்டப்பட்டதாக உள்துறை அமைச்சர் புருனோ ( Bruno Retailleau) தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...

25 690c956ec39eb
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கண் பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து: மின் ஒழுக்கு காரணமெனத் தகவல்!

திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள ஒரு தனியார் கண்...