Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 10
உலகம்செய்திகள்

பிரித்தானியாவின் பரபரப்பான வீதியில் இறந்து கிடந்த பெண்: விசாரணை தீவிரம்

Share

பிரித்தானியாவின் மான்செஸ்டரில் பெண்ணொருவர் உயரமான கட்டிடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மான்செஸ்டரின் பரபரப்பான வீதியான Great Ancoatsயில் பெண்ணொருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அவசர சேவைகள் அழைக்கப்பட்டன. பின்னர் லியோனார்டோ ஹொட்டல் மற்றும் விக்டோரியா ஹவுஸ் அடுக்குமாடி குடியிருப்புகளைச் சுற்றியுள்ள பகுதி சுற்றி வளைக்கப்பட்டது.

அத்துடன் பொலிஸ் தடுப்பு அமைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், குறித்த பெண் ஒரு கட்டிடத்தில் இருந்து விழுந்ததாக தெரிவதாகம், மேலும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை தெரிவித்தது.

மேலும் Greater Manchester Police கூறுகையில், “இன்று காலை 7 மணியளவில் ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்க Great Ancoats வீதிக்கு அழைக்கப்பட்டோம். அவர் ஒரு கட்டிடத்தில் இருந்து விழுந்ததாகத் தெரிகிறது.

ஆனால் தற்போது சூழ்நிலைகளைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வடமேற்கு ஆம்புலன்ஸ் சேவையைத் தொடர்பு கொண்டுள்ளோம்” என தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...