Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 10
உலகம்செய்திகள்

பிரித்தானியாவின் பரபரப்பான வீதியில் இறந்து கிடந்த பெண்: விசாரணை தீவிரம்

Share

பிரித்தானியாவின் மான்செஸ்டரில் பெண்ணொருவர் உயரமான கட்டிடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மான்செஸ்டரின் பரபரப்பான வீதியான Great Ancoatsயில் பெண்ணொருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அவசர சேவைகள் அழைக்கப்பட்டன. பின்னர் லியோனார்டோ ஹொட்டல் மற்றும் விக்டோரியா ஹவுஸ் அடுக்குமாடி குடியிருப்புகளைச் சுற்றியுள்ள பகுதி சுற்றி வளைக்கப்பட்டது.

அத்துடன் பொலிஸ் தடுப்பு அமைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், குறித்த பெண் ஒரு கட்டிடத்தில் இருந்து விழுந்ததாக தெரிவதாகம், மேலும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை தெரிவித்தது.

மேலும் Greater Manchester Police கூறுகையில், “இன்று காலை 7 மணியளவில் ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்க Great Ancoats வீதிக்கு அழைக்கப்பட்டோம். அவர் ஒரு கட்டிடத்தில் இருந்து விழுந்ததாகத் தெரிகிறது.

ஆனால் தற்போது சூழ்நிலைகளைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வடமேற்கு ஆம்புலன்ஸ் சேவையைத் தொடர்பு கொண்டுள்ளோம்” என தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...