tamilni 185 scaled
உலகம்செய்திகள்

புற்றுநோயால் மரணமடைந்த மனைவி: பிரிவைத் தாங்க முடியாமல் கணவர் எடுத்த முடிவு

Share

பிரித்தானியப் பெண் ஒருவர் புற்றுநோயால் மரணமடைய, மனைவியின் பிரிவைத் தாங்க இயலாமல் தவித்த கணவர் மோசமான முடிவொன்றை எடுத்தார்.

இங்கிலாந்தின் Norwich என்னுமிடத்தைச் சேர்ந்தவர் ஆடம் (Adam Thompson, 39). ஆடமின் மனைவி லூசி (Lucy, 44). மனைவி மீது அப்படியொரு பிரியம் ஆடமுக்கு.

2009ஆம் ஆண்டு லூசி நிறுவிய நிறுவனமொன்றில் 2016ஆம் ஆண்டு இணை இயக்குநராக இணைந்தார் ஆடம். இருவருக்கும் காதல் ஏற்படவே, 2019ஆம் ஆண்டு Norwich தேவாலயத்தில் திருமணம் செய்துகொண்டார்கள்.

உண்மையில், அதற்கு முன்பே லூசிக்கு புற்றுநோய் தாக்கியிருந்தது. சிகிச்சைக்குப் பின், பிரச்சினை ஒன்றும் இருக்காது, திருமணம் செய்துகொள்ளலாம் என மருத்துவர்கள் ஒப்புதலளித்தபிறகுதான் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.

ஆனால், 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம், லூசியின் கல்லீரலில் மீண்டும் புற்றுநோய் உருவானதுடன், பல புற்றுநோய்க் கட்டிகள் உருவாகியதும் தெரியவந்தது.

தன் காதல் மனைவிக்கு புற்றுநோய் என தெரியவந்ததும், மனைவியைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார் ஆடம்.

ஆடம் ஐந்து ஆண்டுகளாக மனைவியைக் கவனித்துவந்தும், லூசி உயிரிழந்துவிட்டார். மனைவியின் இழப்பைத் தாங்கமுடியாமல் தவியாய்த் தவித்துவந்தார் ஆடம்.

இந்நிலையில், ஒருநாள் ஆடம் அலுவலகத்துக்கு வரவில்லை என்ற செய்தி அவரது குடும்பத்தினருக்குக் கிடைத்துள்ளது. உடனே அவரது வீட்டுக்குச் சென்ற அவர்கள், ஆடம் உயிரிழந்து கிடப்பதைக் கண்டுள்ளனர்.

உடற்கூறு ஆய்வில், லூசியின் புற்றுநோய் மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்டு ஆடம் தன்னுயிரை மாய்த்துக்கொண்டது தெரியவந்தது.

மனைவி இருக்கும்போதே அவரை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வோர் பலர் வாழும் உலகில், மனைவி மரணமடைந்ததால், அவள் இல்லாமல் எப்படி வாழ்வது என்று எண்ணி மரணத்தைத் தழுவிக்கொண்ட ஆடம் எடுத்த முடிவு மோசமானதுதான் என்றாலும், அவர் மனைவி மீது வைத்த அன்பை நிச்சயம் குறை சொல்ல முடியாது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...