111644558 f3725097 4a19 4a56 832d 50c4305b7672 1
உலகம்செய்திகள்

அடுத்த பிரதமர் யார்? – வலுக்கும் போட்டி

Share

பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டி வலுத்துள்ளது.

இதில் சட்டமா அதிபர் சுவெல்லா பிரேவமான் மற்றும் ஸ்டீவ் பேக்கரை தொடர்ந்து அந்தப் பதவிக்கான போட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் டொம் டெஜன்டட்டும் குதித்துள்ளார்.

தம்மைத் தொடர்ந்து புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் வரை பிரதமர் பதவியில் நீடிக்கப்போவதாக ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.

என்றாலும் அவர் உடன் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று சக கட்சியைச் சேர்ந்த பலர் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

பொரிஸ் ஜோன்சனின் அரசாங்கம் அண்மைய மாதங்களில் தொடர்ச்சியான சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அது அவரது சொந்த கட்சி எம்.பிக்கள் சிலரை, பிரதமரின் இராஜினாமாவைக் கோரத் தூண்டியது.

இந்நிலையில் ஆளும் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்காக கால அட்டவணை அடுத்த வாரம் உறுதி செய்யப்படவுள்ளது. புதிய பிரதமர் வரும் செப்டெம்பரில் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...