35
உலகம்செய்திகள்

சொத்து மதிப்பு மட்டுமே ரூ.5705 கோடி! இந்திய அமைச்சரவையில் பணக்கார எம்.பி யார்?

Share

சொத்து மதிப்பு மட்டுமே ரூ.5705 கோடி! இந்திய அமைச்சரவையில் பணக்கார எம்.பி யார்?

மீண்டும் இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்ற நிலையில், அவரது அமைச்சரவையில் இருக்கும் பணக்கார எம்.பி யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 543 இடங்களில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைத்துள்ளது.

கடந்த ஜூன் 9 -ம் திகதி பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவருடன் சேர்ந்து புதிய அமைச்சரவையில் 71 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

இந்த தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 235 இடங்களைக் கைப்பற்றி நாடாளுமன்றத்தில் வலுவான இடத்தை பிடித்துள்ளது.

நடந்த முடிந்த தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் நட்சத்திர வேட்பாளர்களும் கோடீஸ்வர வேட்பாளர்களும் களமிறக்கப்பட்டனர்.

அந்த வகையில் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பியாகி புதிய அமைச்சரவையில் இடம்பெற்று 99% பேர் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர். அதில் 6 பேருக்கு ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளது.

ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அமைச்சரவையில் உள்ள 71 அமைச்சர்களில் 70 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அவர்களின் சொத்துமதிப்பு சராசரியாக ரூ.107.94 கோடி ஆகும்.

அதில் முக்கியமாக என்.டி.ஏ கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் சார்பில் ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சரான சந்திர சேகர பெம்மசானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.5705.47 கோடி ஆகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 71 அமைச்சர்களில் 28 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...