23 654f4c6a55b09
உலகம்செய்திகள்

மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: காசா நிலைமை குறித்து WHO தலைவர் வேதனை

Share

மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: காசா நிலைமை குறித்து WHO தலைவர் வேதனை

இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் காசாவில் நடைபெறும் அவலம் வேதனை தருவதாக உள்ளது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய ராணுவத்திற்கும், ஹமாஸ் படை வீரர்களுக்கும் இடையே கடுமையான சண்டை பாலஸ்தீனத்தின் காசாவில் நடைபெற்று வருகிறது.
ஹமாஸ் படையினர் மீது தாக்குதல் நடத்துவதாக தெரிவித்து இஸ்ரேலிய ராணுவம் காசாவில் உள்ள மருத்துவமனை, பள்ளிகள் மற்றும் மசூதிகள் ஆகியவற்றின் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் கிட்டத்தட்ட பெண்கள் குழந்தைகள் உட்பட 11, 000 பேர் காசாவில் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் போரினால் காசாவில் ஏற்பட்டுள்ள அவலநிலை குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் தனது வேதனை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில், போரினால் காயமடைந்தவர்களுக்கு காசாவில் மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.
மேலும் போரில் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு குழந்தை கொல்லப்படுகிறது. தரவுகளின் அடிப்படையில் போரில் உயிரிழந்தவர்களில் 70% பேர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்பது கூடுதல் வேதனை அளிக்கிறது என WHO தலைவர் டெட்ரோஸ் அதானம் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 6908adfc6e76f
செய்திகள்இலங்கை

பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகத்தைத் தடுக்க, சிறார்களுக்குப் பாலியல் கல்வித் திட்டம் அவசியம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய!

பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகங்களில் இருந்து சிறார்களைப் பாதுகாப்பதற்காக, அவர்களுக்கு வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வித்...

Sri Lankas apparel export
செய்திகள்இலங்கை

ஆடைக் கைத்தொழில் துறையினர் 2026 பட்ஜெட்டை வரவேற்கின்றனர்: ஆனால் நிலையான கொள்கை அமுலாக்கம் அவசியம்!

இலங்கையின் மிகப்பெரிய தொழில்துறை மற்றும் ஏற்றுமதி வருமான ஆதாரமான ஆடைத் தொழில்துறை, 2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின்...

siemens healthineers insights series 43 digital platforms in healthcare
இலங்கைசெய்திகள்

இலங்கையின் இலவச சுகாதார சேவை டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது: அடுத்த 10 ஆண்டுகளுக்கான மூலோபாயத்தை வகுக்க வழிகாட்டுதல் குழு ஸ்தாபனம்!

இலங்கையின் இலவச சுகாதார சேவையை முழுமையாக டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்காக, சுகாதார மற்றும் பொது ஊடக...

ananda wijepala
செய்திகள்இலங்கை

நுவரெலியா மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் எவருமில்லை: அநுராதபுரத்தில் 7,100 பேர் – அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தகவல்!

இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமே எந்தவொரு சிவில் பாதுகாப்பு சேவை அதிகாரியும் சேவையில் இல்லை என்று...