23 654f4c6a55b09
உலகம்செய்திகள்

மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: காசா நிலைமை குறித்து WHO தலைவர் வேதனை

Share

மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: காசா நிலைமை குறித்து WHO தலைவர் வேதனை

இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் காசாவில் நடைபெறும் அவலம் வேதனை தருவதாக உள்ளது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய ராணுவத்திற்கும், ஹமாஸ் படை வீரர்களுக்கும் இடையே கடுமையான சண்டை பாலஸ்தீனத்தின் காசாவில் நடைபெற்று வருகிறது.
ஹமாஸ் படையினர் மீது தாக்குதல் நடத்துவதாக தெரிவித்து இஸ்ரேலிய ராணுவம் காசாவில் உள்ள மருத்துவமனை, பள்ளிகள் மற்றும் மசூதிகள் ஆகியவற்றின் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் கிட்டத்தட்ட பெண்கள் குழந்தைகள் உட்பட 11, 000 பேர் காசாவில் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் போரினால் காசாவில் ஏற்பட்டுள்ள அவலநிலை குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் தனது வேதனை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில், போரினால் காயமடைந்தவர்களுக்கு காசாவில் மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.
மேலும் போரில் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு குழந்தை கொல்லப்படுகிறது. தரவுகளின் அடிப்படையில் போரில் உயிரிழந்தவர்களில் 70% பேர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்பது கூடுதல் வேதனை அளிக்கிறது என WHO தலைவர் டெட்ரோஸ் அதானம் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...