666 1 scaled
உலகம்செய்திகள்

பாலியல் துஷ்பியோகத்தில் ஈடுபட்ட WHO நிறுவன ஊழியர்கள்

Share

உலக சுகாதார நிறுவன ஊழியர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர் என தகவல் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

காங்கோ நாட்டில் உலக சுகாதார அமைப்பின் ஊழியர்கள் பணியாற்றும் போதே இவ்வாறு பாலியல் துஷ்பியோகத்தில் ஈடுபட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆபிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக உலக சுகாதார அமைப்பு ஊழியர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்டனர்.

அவர்கள் அங்கு பல்வேறு இடங்களுக்குச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

இவ்வாறு அங்கு 199 இற்கும் மேலான ஊழியர்கள் ஆங்காங்கே சிகிச்சை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் உலக சுகாதார நிறுவன ஊழியர்கள் பலர் பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டனர் எனத் தெரியவந்துள்ளது.

அதில் உலக சுகாதார ஊழியர்கள் 9 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியாகியுள்ளது.
அத்துடன் 50 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர் எனவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் செயல்களில் ஈடுபட்டனர் என 83 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானம் வருத்தம் தெரிவித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...