15 26
உலகம்செய்திகள்

2,400 மைல்கள் தொலைவு.., உலகிலேயே மர்மங்கள் நிறைந்த தீவு எங்குள்ளது தெரியுமா?

Share

2,400 மைல்கள் தொலைவு.., உலகிலேயே மர்மங்கள் நிறைந்த தீவு எங்குள்ளது தெரியுமா?

பல மர்மமான நிகழ்வுகளுடன் கூடிய தீவு ஒன்றை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உலகில் பல நூற்றாண்டுகளாக மர்மங்கள் நிறைந்து பல இடங்கள் உள்ளன. அந்தவகையில், தற்போது நாம் பனிக்கட்டி மற்றும் கடலால் சூழப்பட்ட தீவை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நாம் பார்க்க போகும் தீவு பௌவெட் தீவு (Bouvet Island) ஆகும். இந்த இடம் மக்களிடமிருந்து 2,400 மைல்கள் தொலைவில் உள்ளது. இது மிகவும் ஆபத்தான இடமாக அறியப்படுகிறது.

இந்த தீவானது தென் அட்லாண்டிக் பெருங்கடலின் தொலைதூரப் பகுதியில், தென்னாப்பிரிக்காவிற்கும் அண்டார்டிகாவிற்கும் இடையில் உள்ளது. இது பனிக்கட்டி மற்றும் கடலால் சூழப்பட்டுள்ளது.

இந்த தீவானது பல மர்மங்களுடன் இணைந்துள்ளது. இந்த தீவில் 1964 -ம் ஆண்டில் மனிதர்கள் யாரும் இல்லாத ஒரு படகு கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த மர்மங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமலே உள்ளது.

இதையடுத்து 1979 -ம் ஆண்டில் அமெரிக்க செயற்கைக்கோள் Bouvet தீவு மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு அருகே ஒரு ஒளியைக் கண்டுபிடித்தது.

இந்த ஒளியானது தென்னாப்பிரிக்கா-இஸ்ரேலிய அணு ஆயுத சோதனையின் விளைவாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால், இதற்கு எந்த நாடும் பொறுப்பேற்கவில்லை.

மேலும், இந்த தீவானது பல கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பறவைகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக விளங்குகிறது.

இங்கு, பெங்குவின், ஓர்காஸ் மற்றும் ஹம்ப்பேக் திமிங்கலங்கள் ஆகியவை அதிக எண்ணிக்கையில் உள்ளது. அதேபோல, பனிப்பாறை பனி பெட்ரல் மற்றும் அண்டார்டிக் பிரியான் ஆகிய பறவைகளும் காணப்படுகிறது.

Share
தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...