9 1 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல் செய்தது போர் குற்றமாக இருக்கலாம்..! ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையம் கவலை

Share

இஸ்ரேல் செய்தது போர் குற்றமாக இருக்கலாம்..! ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையம் கவலை

காசாவின் வடக்கு பகுதியில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போர் குற்றமாக இருக்கலாம் என மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் படையினருக்கு இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக அழிக்கும் எண்ணத்தில் இஸ்ரேலிய ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலின் ஒருப்பகுதியாக காசாவின் வடக்கு பகுதியில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் நேற்று வான் தாக்குதல் நடத்தியது.

இந்த வான் தாக்குதலில் 47 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டு இருப்பதாகவும், பலர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் போர் குற்றமாக இருக்கலாம் என மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரிவு வெளியிட்ட அறிக்கையில் ஜபாலியா அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பொதுமக்களின் உயிரிழப்பு அதிகமாக உள்ளது.

பொதுமக்கள் உயிரிழப்புகளின் விகிதாசார அடிப்படையில் இஸ்ரேலின் இத்தகைய தாக்குதல் போர் குற்றங்களுக்கு சமமானதாக இருக்கலாம் என கவலை அளிப்பதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த தாக்குதல் ஹமாஸ் படையின் ராணுவ உள்கட்டமைப்புகள் மற்றும் சுரங்க பாதைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், இதில் ஹமாஸின் தளபதி மற்றும் அவரது கூட்டாளிகள் கொல்லப்பட்டு இருப்பதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...