செய்திகள்உலகம்

நாங்கள் ஜரோப்பிய யூனியனின் அடிமைகளில்லை!! – இம்ரான் கான்!!

Share
Imrankhan
Share

நாம் ஒன்றும் ஜரோப்பிய யூனியனின் அடிமைகளில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உக்ரைன் ரஸ்யா போர் நடந்து கொண்டிருக்கும்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக கூடியது. அப்போது ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானங்கள் கொண்டு வந்தன.

இந்த தீர்மானங்கள் தோல்வியடைந்தன. இந்தியா, பாகிஸ்தான் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

வாக்கெடுப்பு நடப்பதற்கு முன் கடந்த 1-ந்தேதி இஸ்லாமாபாத்தில் உள்ள வடக்கு நாடுகளில் தூதரக அதிகாரிகள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கூட்டாக ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில் ஐ.நா. வாக்கெடுப்பின்போது பாகிஸ்தான் ரஷியாவுக்கு எதிராக வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்தக் கடித விவகாரம் தற்போது வெளிவந்துள்ளது. இதுகுறித்து பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நாங்கள் அவர்களின் அடிமைகளா? என கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இம்ரான் கான் கூறுகையில் ‘‘அவர்கள் எங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள்?. நாம் அவர்களுடைய அடிமைகளா? அவர்கள் என்ன சொன்னாலும் நாம் அதை செய்யனுமா?.

ஐரோப்பிய யூனியன் தூதர்களுக்கு நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். அவர்கள் இந்தியாவுக்கு இதுபோன்று கடிதம் எழுதினார்களா?’’ என்றார்.

மேலும், நாங்கள் ரஷியாவுடன் நட்பாக இருக்கிறோம். மேலும் அமெரிக்காவுடனும் நட்டபாக இருக்கிறோம். சீனா, ஐரோப்பா நாடுகளுடனும் நட்டபாக இருக்கிறோம். ஆனால், எந்த முகாமிலும் இல்லை.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மேற்கு நேட்டோ படைகளுக்கு பாகிஸ்தான் உதவி செய்தது. அதனால் நன்றி கிடைப்பதற்குப் பதிலாக விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது என்றார்.

#WorldNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...