rtjy 82 scaled
உலகம்செய்திகள்

பிலிப்பைன்ஸ் மீன்பிடி கப்பல் மீது தண்ணீர் தாக்குதல்: சீன கடற்படை அத்துமீறல்: வீடியோ

Share

பிலிப்பைன்ஸ் மீன்பிடி கப்பல் மீது தண்ணீர் தாக்குதல்: சீன கடற்படை அத்துமீறல்: வீடியோ

தென் சீன கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டின் மீன்பிடி படகு மீது சீன கடலோரக் காவல் படை தண்ணீர் பாய்ச்சி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் சீன கடல் பகுதியில் உள்ள மணல்திட்டு ஒன்றை சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய இரண்டு நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த மணல்திட்டுக்கு அருகில் நின்ற பிலிப்பைன்ஸ் நாட்டின் மீன்பிடி படகு ஒன்றை சீன கடற்படையும், சீன ஆயுதக் குழுவின் படகும் இணைந்து தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்துள்ள பிலிப்பைன்ஸ்  மற்றும் அதன் நட்பு நாடான அமெரிக்கா சீனாவின் நடவடிக்கைக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

சீனா தன்னுடைய அதிகாரம் முழுவதையும் தென் சீன கடல் பகுதியில் நிலைநாட்ட முயன்று வருகிறது.

அதே சமயம் சர்வதேச கடல் வழித்தட உரிமையை சீனா பறிப்பதாகவும் அமெரிக்கா கருதி வருகிறது.

மீன்பிடி படகு மீது சீன கப்பல்கள் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...