3 1 3 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படாவிட்டால்… பற்றியெரியும்: எச்சரிக்கும் ஈரான் அமைச்சர்

Share

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படாவிட்டால்… பற்றியெரியும்: எச்சரிக்கும் ஈரான் அமைச்சர்

ஹமாஸ் குழுவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் நிறுத்தம் நீட்டிக்கப்படாவிட்டால், மத்திய கிழக்கு முழுவதும் போர் பரவும் அபாயமிருப்பதாக ஈரான் வெளிவிவகார அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லெபனான் செய்தி ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் குறித்த கருத்தை பதிவு செய்துள்ளார். காஸா பகுதியில் குறைந்தது நான்கு நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலும் ஹமாஸும் புதன்கிழமை ஒப்புக்கொண்டன.

காஸாவிற்கு மனிதாபிமான உதவிகள் முன்னெடுக்கவும், இஸ்ரேலிய பணயக்கைதிகள் குறைந்தது 50 பேர்களை விடுவிக்கவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இஸ்ரேல் சிறையில் வாடும் பாலஸ்தீன மக்களில் 150 பேர்கள் விடுவிக்கப்படவும் முடிவாகியுள்ளது.

இந்த நிலையில் ஈரான் வெளிவிவகார அமைச்சர் Hossein Amir-Abdollahian பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் விஜயம் செய்ய இருப்பதாகவும், காஸா மீது இஸ்ரேல் முன்னெடுக்கும் கொடூர தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும்,

காஸா மீதான தடைகளை நீக்கவும், மனிதாபிமான உதவிகளை காஸா மக்களுக்கு முன்னெடுக்கும் பொருட்டு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் இந்த பயணம் பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நான்கு நாட்கள் என்ற இந்த போர் நிறுத்தம் கண்டிப்பாக நீட்டிக்கப்பட வேண்டும் என்றார். இல்லை எனில் மத்திய கிழக்கு முழுவதும் இதன் தாக்கம் இருக்கும் எனவும், அது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
202002060432067433 Director Gowthaman held for attempt to protest consecration SECVPF
செய்திகள்இந்தியா

திருமலை புத்தர் சிலை விவகாரம்: அநுரகுமார திசாநாயக்க ராஜபக்ச, ரணில் வழியில் பயணிக்கிறாரா? – இயக்குநர் வ.கௌதமன் காட்டம்!

திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்ட பின், அதை மீண்டும் அதே இடத்தில்...

25 691b53209a165
செய்திகள்இலங்கை

பௌத்தத்தை அழித்து ஈழம் அமைக்கிறதா அரசாங்கம்? – அம்பிட்டிய சுமனரத்ன தேரர் ஆவேசம்! மகாநாயக்க தேரர்களுக்கு முக்கிய கோரிக்கை!

திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக நிறுவப்பட்ட புத்தர் சிலையை அகற்றியமை தொடர்பாக, அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அவர்கள்...

images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...