tamilnirr 2 scaled
உலகம்செய்திகள்

100 ஆவது நாளில் இஸ்ரேல் – ஹமாஸ் போர்க்களம்

Share

இஸ்ரேல் – ஹமாஸ் போர் 100 ஆவது நாளை தாண்டியுள்ளதுடன் போரில் வடக்கு காசா முழுவதும் நிர்மூலமாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எகிப்துக்கும் காசாவுக்கும் இடையிலான எல்லையை மூடும் வரை ஹமாசுக்கு எதிரான போர் முடிந்து விட்டதாக இஸ்ரேல் கருதாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

அத்துடன் தெற்கு காசாவில் உள்ள எல்லை வழியாக இராணுவ உபகரணங்களும் பிற ஆயுதங்களும் தொடர்ந்து நுழைகிறது. எனவே அதை நிச்சயமாக நாங்கள் மூட வேண்டும் என்றும் இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு காசா முழுவதும் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது மத்திய, தெற்கு காசாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகின்றது.

காசா மீது ஏவுகணை குண்டுகள் தொடர்ந்து வீசப்படுவதுடன் தரை வழிதாக்குதல் நடைபெற்று வருகின்றது.

இந்த போரில், காசாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 24 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவார்கள்.

இந்நிலையில் காசாவுக்குள் நிவாரண பொருட்கள் செல்ல அனுமதிக்காவிட்டால் அங்கு கடுமையான பஞ்சம் ஏற்படும் என்று ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...