24 659a226b05066
உலகம்செய்திகள்

தங்க காலணியை தலையில் ஏந்தி நடைப்பயணம்: அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர் காணிக்கை

Share

அயோத்தி ராமருக்கு காணிக்கையாக தங்க காலணிகளை சுமந்தபடி பக்தர் ஒருவர் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22ம் திகதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஹைதராபாத் நகரை சேர்ந்த சல்லா சீனிவாச சாஸ்திரி(64) என்ற தீவிர பக்தர் ஒருவர், நண்பர்கள் சிலரின் நன்கொடை உதவியுடன் ரூபாய் 65 லட்சம் மதிப்புள்ள ஐம்பொன்னால் செய்யப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட காலணியை தலையில் சுமந்து கொண்டு அயோத்திக்கு நடைப்பயணம் செய்து வருகிறார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டதை அடுத்து, தங்க காலணியை ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்திக்கு 8 ஆயிரம் கி.மீ தூரத்திற்கு புனித நடைப்பயணமாக கொண்டு செல்ல சல்லா சீனவாச சாஸ்திரி திட்டமிட்டுள்ளார்.

அதன்படி கடந்த ஜூலை மாதம் 20ம் திகதி ராமேஸ்வரத்தில் பயணத்தை தொடங்கிய அவர், இடையில் அவசர வேலையாக லண்டன் செல்ல வேண்டி இருந்ததால்  தனது புனித பயணத்தை ஒத்தி வைத்து இருந்தார்.

பின்னர் மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்த அவர், தற்போது உத்தரபிரதேச மாநிலம், சித்ரகூடம் என்னும் இடத்தில் உள்ளார்.

இன்னும் 10 நாட்களில் அயோத்திக்கு செல்ல திட்டமிட்டுள்ள சல்லா சீனிவாச சாஸ்திரி தங்க காலணியை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் வழங்குவேன் என தெரிவித்துள்ளார்.

சல்லா சீனிவாச சாஸ்திரி இதற்கு முன்னதாக ராமர் கோயில் கட்டுவதற்காக 5 வெள்ளி செங்கல்களை வழங்கியுள்ளார்.

Share
தொடர்புடையது
world
செய்திகள்இந்தியா

சீமான் பின்னடைவு: தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பிரபு முன்னிலை!

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி...

Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...