4 1 scaled
உலகம்செய்திகள்

மீண்டும் வாக்னர் கூலிப்படை: பிரிகோஜின் மகன் தலைமையில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை தீவிரம்

Share

மீண்டும் வாக்னர் கூலிப்படை: பிரிகோஜின் மகன் தலைமையில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை தீவிரம்

ரஷ்ய தேசிய காவலர் படையின் ஒற்றை அங்கமாக தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் மகன் பாவெல் பிரிகோஜின் தலைமையில் வாக்னர் கூலிப்படை ஆட்சேர்ப்பு நடவடிக்கையை மீண்டும் தொடங்கி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான மோதலில் ரஷ்யாவிற்கு சார்பாக வாக்னர் கூலிப்படை போரில் களமிறங்கியது.

ஆனால் ரஷ்ய ராணுவ படைக்கும், வாக்னர் கூலிப்படைக்கும் ஏற்பட்ட அறிப்படாத முரண்பாடுகளை தொடர்ந்து, வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் தனது படைகளை ரஷ்ய தலைநகர் மாஸ்கோ நோக்கி அணிவகுத்து அழைத்து சென்றார்.

இந்த முயற்சி முறியடிக்கப்பட்டதுன், வாக்னர் கூலிப்படை கலைக்கப்பட்டது, அதன் வீரர்கள் பெலாரஸ் நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியானது.

அத்துடன் எவ்ஜெனி பிரிகோஜன் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில் மர்மமான விமான விபத்தில் அவர் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் விபத்தில் கொல்லப்பட்ட வாக்னர் கூலிப்படையின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜினின் மகன் பாவெல் பிரிகோஜின் தலைமையில் வாக்னர் கூலிப்படைக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கையை மீண்டும் தொடங்கி இருக்கலாம் என அறிக்கைகள் வெளியாகி வருகிறது.

அத்துடன் இவை ரஷ்ய தேசிய காவலர் படையின்(Rosgvardiya) ஒற்றை அங்கமாக உருவாக்கப்படுவதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் உக்ரைனின் தேசிய எதிர்ப்பு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், ரஷ்யாவின் தென் மேற்கு நகரமான வோரோனேஜில் வாக்னர் உறுப்பினர்கள் உட்பட 10000 பேருக்கான முகாம்களை ரஷ்ய தேசிய காவலர் படை (Rosgvardiya) அமைத்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.

இவை உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் நாசகரமான செயல்களை செய்வதற்காக திட்டமிட்டு முகாமிட்டு இருப்பதாகவும் உக்ரைன் தேசிய எதிர்ப்பு மையம் தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி: பண்டிகை முற்பணம் ரூ. 15,000 ஆக உயர்வு! இடர் கடன் முற்பணம் ரூ. 4 இலட்சமாக அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணம் (Festival Advance) மற்றும் இடர் கடன் முற்பணம் (Distress...

MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...