1 9 2 scaled
உலகம்செய்திகள்

வாக்னர் கூலிப்படைத் தலைவர் கொல்லப்பட்ட விமானத்தில்  கடைசியாக அனுப்பிய புகைப்படம்

Share

வாக்னர் கூலிப்படைத் தலைவர் கொல்லப்பட்ட விமானத்தில்  கடைசியாக அனுப்பிய புகைப்படம்

ஒரு காலத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்து, பின் அவருக்கு எதிராக மாறிய வாக்னர் கூலிப்படைத் தலைவர் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதில் அந்த விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.

அவர்களில், விமான பணிப்பெண் ஒருவரும் அடங்குவார்.

வாக்னர் கூலிப்படைத் தலைவரான Yevgeny Prigozhin பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதில் அவரும் அவருடன் பயணித்த ஒன்பது பெரும் உயிரிழந்தார்கள்.

அவர்களில், கிறிஸ்டினா ( Kristina Raspopova, 39) என்னும் விமானப் பணிப்பெண்ணும் ஒருவர்.

தாங்கள் பயணிக்க இருந்த விமானம் எதிர்பாராதவிதமாக தாமதமாகியுள்ளதாகவும், அது பழுதுபார்க்கப்படுவதாகவும் தனது குடும்பத்தினருக்கு செய்தி அனுப்பியுள்ளார் கிறிஸ்டினா.

விமான நிலையத்தின் கஃபேயில் நிண்ட நேரமாக காத்திருந்த கிறிஸ்டினா, ஒரு புகைப்படத்தையும் அனுப்பியுள்ளார். மாஸ்கோவிலிருந்து புறப்பட்ட விமானம் 28,000 அடி உயரத்திலிருந்து விழுந்து தீப்பற்றி எரிய, கிறிஸ்டினா மட்டுமல்ல, யாருடைய உடலுமே முழுமையாகக் கிடைக்கவில்லை.

வாக்னர் கூலிப்படைத்தலைவரான Prigozhin பயணித்த அந்த விமானம் விபத்துக்குள்ளானதன் பின்னணியில் புடின் இருப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், விமானம் புறப்பட தாமதமானதாக கிறிஸ்டினா கூறியுள்ளதைப் போல, விமானம் புறப்படும் கடைசி நேரத்தில், Prigozhinக்கு பிடித்த விலையுயர்ந்த ஒயின் அடங்கிய பார்சல் ஒன்று விமானத்தில் ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், விமானம் புறப்பட தாமதமானதாக கிறிஸ்டினா கூறியுள்ளதைப் போல, விமானம் புறப்படும் கடைசி நேரத்தில், Prigozhinக்கு பிடித்த விலையுயர்ந்த ஒயின் அடங்கிய பார்சல் ஒன்று விமானத்தில் ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...