1 9 2 scaled
உலகம்செய்திகள்

வாக்னர் கூலிப்படைத் தலைவர் கொல்லப்பட்ட விமானத்தில்  கடைசியாக அனுப்பிய புகைப்படம்

Share

வாக்னர் கூலிப்படைத் தலைவர் கொல்லப்பட்ட விமானத்தில்  கடைசியாக அனுப்பிய புகைப்படம்

ஒரு காலத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்து, பின் அவருக்கு எதிராக மாறிய வாக்னர் கூலிப்படைத் தலைவர் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதில் அந்த விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.

அவர்களில், விமான பணிப்பெண் ஒருவரும் அடங்குவார்.

வாக்னர் கூலிப்படைத் தலைவரான Yevgeny Prigozhin பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதில் அவரும் அவருடன் பயணித்த ஒன்பது பெரும் உயிரிழந்தார்கள்.

அவர்களில், கிறிஸ்டினா ( Kristina Raspopova, 39) என்னும் விமானப் பணிப்பெண்ணும் ஒருவர்.

தாங்கள் பயணிக்க இருந்த விமானம் எதிர்பாராதவிதமாக தாமதமாகியுள்ளதாகவும், அது பழுதுபார்க்கப்படுவதாகவும் தனது குடும்பத்தினருக்கு செய்தி அனுப்பியுள்ளார் கிறிஸ்டினா.

விமான நிலையத்தின் கஃபேயில் நிண்ட நேரமாக காத்திருந்த கிறிஸ்டினா, ஒரு புகைப்படத்தையும் அனுப்பியுள்ளார். மாஸ்கோவிலிருந்து புறப்பட்ட விமானம் 28,000 அடி உயரத்திலிருந்து விழுந்து தீப்பற்றி எரிய, கிறிஸ்டினா மட்டுமல்ல, யாருடைய உடலுமே முழுமையாகக் கிடைக்கவில்லை.

வாக்னர் கூலிப்படைத்தலைவரான Prigozhin பயணித்த அந்த விமானம் விபத்துக்குள்ளானதன் பின்னணியில் புடின் இருப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், விமானம் புறப்பட தாமதமானதாக கிறிஸ்டினா கூறியுள்ளதைப் போல, விமானம் புறப்படும் கடைசி நேரத்தில், Prigozhinக்கு பிடித்த விலையுயர்ந்த ஒயின் அடங்கிய பார்சல் ஒன்று விமானத்தில் ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், விமானம் புறப்பட தாமதமானதாக கிறிஸ்டினா கூறியுள்ளதைப் போல, விமானம் புறப்படும் கடைசி நேரத்தில், Prigozhinக்கு பிடித்த விலையுயர்ந்த ஒயின் அடங்கிய பார்சல் ஒன்று விமானத்தில் ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...