rtjy 312 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

இஸ்ரேலில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் தொடர்பில் வேலைத்திட்டம்

Share

இஸ்ரேலில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் தொடர்பில் வேலைத்திட்டம்

விசா இன்றி சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு விசா வழங்கும் செயற்பாட்டுக்காக, அங்கிருக்கும் இலங்கையர்களின் தகவல்களை திரட்டும் வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இதற்கான பணிகள் இஸ்ரேலில் இருக்கும் இலங்கை தூதரகத்தில் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் குடிவரவு குடியகல்வு பிரிவின் பணிப்பாளர் நாயகம் எயால் சிஸ்சோ உள்ளிட்ட அதிகாரிகள் சிலர் இலங்கை தூதரகத்துக்கு வந்து, தூதுவருடன் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது விசா காலம் முடிவடைந்த பின்னரும் தொடர்ந்து இஸ்ரேலில் தங்கி இருக்கும் இலங்கையர்களின் விசா அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்குமாறு குடிவரவு குடியகல்வு பிரிவின் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கோரிக்கைக்கு இஸ்ரேல் குடிவரவு குடியகல்வு பிரிவின் பணிப்பாளர் நாயகம் இணங்கியதாகவும் விசா இனுமதிப்பத்திரம் இல்லாமல் தங்கி இருக்கும் இலங்கையர்களின் தகவல்களை கோரியதாகவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறே விசா காலம் முடிவடைந்த பின்னரும் இஸ்ரேலில் தங்கி இருக்கும் இலங்கையர்களுக்கு விவசாய பிரிவில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கும் பணிப்பாளர் நாயகம் இணங்கியதாகவும் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
26 696b34410ecde
இலங்கைசெய்திகள்

துபாய் இஷார வலையமைப்பின் 3 முக்கிய ஏஜெண்டுகள் கைது: கம்பளையில் 20 வயது இளைஞர்கள் போதைப்பொருளுடன் சிக்கினர்!

துபாயில் இருந்து இலங்கையின் போதைப்பொருள் வலையமைப்பை இயக்கி வரும் ‘துபாய் இஷார’ என்ற முக்கிய கடத்தல்காரருக்குச்...

images 13 2
செய்திகள்இலங்கை

டித்வா புயல் நிவாரணம்: 3,000 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கல் – வாடகை வீடுகளுக்கும் அரசாங்கம் நிதி உதவி!

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்வி உதவிக் கொடுப்பனவுகள் மற்றும் வீடுகளைச் சீரமைப்பதற்கான மானியங்கள்...

c1 657340 150817014214
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவில் மாயமான அரசு விமானம்: 11 பேருடன் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதா?

இந்தோனேசியாவின் கடல்சார் விவகாரம் மற்றும் மீன்பிடி அமைச்சிற்குச் சொந்தமான ATR 42-500 ரக விமானம் ஒன்று,...

articles2FDqSEA1koeExt2vjgQ8N0
இலங்கைஅரசியல்செய்திகள்

இனவாதத்தை தூண்ட இடமளிக்க மாட்டோம்: சாவகச்சேரி வீட்டுத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி அநுர உறுதி!

நாட்டில் தொல்பொருள் அல்லது மதத் தலங்களை முன்னிறுத்தி மீண்டும் இனவாத முரண்பாடுகளைத் தூண்டிவிட முயற்சிப்பவர்களுக்கு ஒருபோதும்...