ஐந்து நாடுகளின் குடிமக்களுக்கு விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியா அறிவிப்பு
உலகம்செய்திகள்

ஐந்து நாடுகளின் குடிமக்களுக்கு விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியா அறிவிப்பு

Share

ஐந்து நாடுகளின் குடிமக்களுக்கு விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியா அறிவிப்பு

ஐந்து நாடுகளின் குடிமக்கள் புலம்பெயர்தலை தவறாக பயன்படுத்துவதாகக் கூறி, அந்த நாடுகளிலிருந்து வரும் அனைவருக்கும் விசா கட்டுப்பாடுகளை விதிப்பதாக பிரித்தானிய உள்துறைச் செயலர் தெரிவித்துள்ளார்.

எந்தெந்த நாடுகள்?
அந்த நாடுகள், டொமினிக்கா, ஹோண்டூராஸ், நமீபியா, திமோர் – லெஸ்தே மற்றும் வாநுவாட்டு ஆகிய ஐந்து நாடுகள் ஆகும்.

இந்த விசா கட்டுப்பாடுகள் புலம்பெயர்தல் மற்றும் எல்லை பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே என்று கூறியுள்ள உள்துறைச் செயலாரன சுவெல்லா பிரேவர்மேன், இந்த கட்டுப்பாடுகள் அந்த நாடுகளுடனான உறவு சரியில்லை என்பதற்கான அடையாளம் அல்ல என்று கூறியுள்ளார்

காரணம் என்ன?
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர் அனுப்பியுள்ள எழுத்துப்பூர்வ அறிக்கை ஒன்றில், டொமினிக்காவும் வானுவாட்டுவும் முதலீடு செய்வபர்களுக்கு குடியுரிமை வழங்குவது, புலம்பெயர்தலை தவறாக பயன்படுத்துவதை தெளிவாகக் காட்டுவதாக தெரிவித்துள்ளதுடன், அந்நாடுகள் பிரித்தானியாவுக்கு அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய நபர்களுக்கு குடியுரிமை வழங்கிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல, நமீபியா மற்றும் ஹோண்டூராஸ் ஆகிய நாடுகளிலிருந்து பிரித்தானியா வருவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவருவதாக தெரிவித்துள்ள பிரேவர்மேன், அந்நாட்டுக் குடிமக்களும் புலம்பெயர்தலை தவறாக பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

திமோர் – லெஸ்தே குடிமக்களோ மோசடி செய்து பிரித்தானியாவில் வாழ முயல்வது தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே முறைப்படி பிரித்தானியா வர முன்பதிவு செய்துள்ளோர், மாற்றங்களுக்கு தயாராவதற்காக அவர்களுக்கு நான்கு வாரங்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...