உலகம்செய்திகள்

அவுஸ்திரேலியாவில் முதியவரின் காலில் சுற்றிய விஷப்பாம்பு: நண்பருக்கு நேர்ந்த சோகம்

Share

அவுஸ்திரேலியாவில் முதியவரின் காலில் சுற்றிய விஷப்பாம்பு: நண்பருக்கு நேர்ந்த சோகம்

நண்பரை காப்பாற்ற முயன்று விஷப் பாம்பு கடித்ததில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் மத்திய குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள கவுமாலா அரசு பள்ளியின் 100வது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட 69 வயதுடைய நபரின் காலில் விஷப் பாம்பு ஒன்று சுற்றிக் கொண்டது, இதனை பார்த்த அவருடைய நண்பர் உடனடியாக விஷப்பாம்பை நண்பரின் காலில் இருந்து அகற்றும் வேலையில் ஈடுபட்டார்.

அப்போது விஷப்பாம்பு அவரது கைகள் மற்றும் நெஞ்சு பகுதியில் பலமுறை கடித்தது. இதனால் அவருக்கு சம்பவ இடத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டது.

அவசர மருத்துவ முதலுதவி குழு தேவையான அனைத்து சிகிச்சைகளை செய்த நிலையிலும், விஷப்பாம்பு கடித்ததில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதற்கிடையில் முதலில் விஷப்பாம்பு காலில் சுற்றிய 69 வயது முதியவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அவர் உடனடியாக மேக்கே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...