24 661cca8c1bfe0
உலகம்செய்திகள்

ஐநாவால் போரை நிறுத்த முடியாது, உலகு தாங்காது! ஈரான்,கவிஞர் வைரமுத்து வேதனை

Share

ஐநாவால் போரை நிறுத்த முடியாது, உலகு தாங்காது! ஈரான்,கவிஞர் வைரமுத்து வேதனை

இஸ்ரேல், ஈரான் மோதல் குறித்து வேதனை தெரிவித்து கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் இஸ்ரேல், ஈரானின் மோதலினால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஹமாஸ் மீதான தாக்குதலில் இஸ்ரேலுக்கு ஆதரவளித்து வந்த அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் துணை நிற்க மாட்டோம் என தெரிவித்தது.

ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க முயன்றால், மத்திய கிழக்கில் தொடங்கும் மோதல் உலகப்போர் ஆக மாறும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து இஸ்ரேல், ஈரான் போரை ஐ.நா நினைத்தாலும் நிறுத்த முடியாது என்று கவிதை வடிவில் பதிவிட்டுள்ளார்.

அவரது எக்ஸ்தள பதிவில், ”இஸ்ரேல் மீது ஈரானும், ஹமாஸ் மீது இஸ்ரேலும் விசிறியடிக்கும் எறிகணைகள், பாப்பாரபட்டியில் ஈயோட்டிக்கொண்டு பலாச்சுளை விற்றுக் கொண்டிருக்கும் பஞ்சக் கிழவியின் கூடையை உடைக்கின்றன. உலகப் பொருளாதாரம் பின்னல் மயமானது. உலகு தாங்காது, நிறுத்துங்கள் போரை. ஐ.நாவால் முடியாது; அவரவர் நிறுத்தலாம்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....