12 4
உலகம்செய்திகள்

கமலா ஹாரிஸை தொடர்ந்து அமெரிக்காவில் கவனம் பெற்ற மற்றுமொரு இந்திய வம்சாவளி பெண்

Share

கமலா ஹாரிஸை தொடர்ந்து அமெரிக்காவில் கவனம் பெற்ற மற்றுமொரு இந்திய வம்சாவளி பெண்

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் போட்டியிட்ட போது, அவரது துணை ஜனாதிபதி பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட, இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸூக்கு கிடைத்த அதே ஊடக வெளிச்சம் தற்போது மற்றுமொறு இந்திய வம்சாவளி பெண்ணுக்கு கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.இதில் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) போட்டியிடுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் ஜனாதிபதியாக தெரிவானால் துணை ஜனாதிபதியாக செனட்டர் ஜே.டி.வொன்ஸ் தெரிவாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் ஜே.டி.வொன்ஸை விட அவருடைய இந்திய வம்சாவளி மனைவியான உஷா சிலுக்குரி தரப்பில் அமெரிக்க ஊடகங்கள் அதிக கவனம் வெலுத்தி வருகின்றன.

இந்திய வம்சாவளியை சேர்ந்த உஷா சிலுக்குரி சட்டக் கல்லூரியில் வைத்தே 2013ல் ஜே.டி.வான்ஸை சந்தித்துள்ளார்.

குழு விவாதம் ஒன்றில் இருவரும் ஒரே அணியில் கலந்து கொண்டுள்ள அதன் பின்னர் இருவரும் வாழ்க்கை முழுவதும் ஒன்றாக பயணிக்க முடிவு செய்துள்ளனர்.

யேல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற உஷா, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெற்றுள்ளதோடு, Munger, Tolles, மற்றும் Olson ஆகிய நிறுவனங்களுக்கான சட்டத்தரணியாகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும், கலிபோர்னியா, ஓஹியோ மற்றும் கொலம்பியா மாவட்டம் ஆகிய நீதிமன்றங்களில் சட்டத்தரணியாக பணியாற்றும் உரிமம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

2014இல் ஜே.டி.வான்ஸ் – உஷா தம்பதி திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த தம்பதியின் மகளாக பிறந்த உஷா, இந்து முறைப்படியே தமது வாழ்க்கையை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...