உலகம்செய்திகள்

நியூயார்க்கில் குடும்பம் ஒன்றிற்கு நேர்ந்த சோகம்: பொலிஸாரை தாக்கிய நபர் மீது துப்பாக்கி சூடு

Share

நியூயார்க்கில் குடும்பம் ஒன்றிற்கு நேர்ந்த சோகம்: பொலிஸாரை தாக்கிய நபர் மீது துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள வீடு ஒன்றில் நடத்த கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நியூயார்க்கின் குயின்ஸ் நகரின் ஃபார் ராக்வே சுற்றுப்புறத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளம் பெண் ஒருவர் தன்னுடைய உறவினர் தனது குடும்ப உறுப்பினர்களை தாக்கி கொல்வதாக பொலிஸாருக்கு 911ல் அவசர அழைப்பு கொடுத்துள்ளார்.

அதனடிப்படையில் சம்பவ இடத்தை ஆராய இரண்டு பொலிஸார் அனுப்பப்பட்ட நிலையில், தீ வைக்கப்பட்ட அந்த வீட்டில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

சம்பந்தப்பட்ட வீட்டை பொலிஸ் அதிகாரிகள் சோதனையிட உள்ளே சென்ற போது, ஆண் ஒருவர் பொருள்களுடன் வெளியேறுவதை பார்த்துள்ளனர்.

உடனே அவரை தடுத்து பேச முயன்ற போது, அந்த நபர் தன்னிடம் இருந்த கத்தியால் 2 பொலிஸ் அதிகாரிகளையும் குத்தியுள்ளார். இதனால் 2 பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் தங்களுடைய தற்காப்பிற்காக துப்பாக்கியை எடுத்து அந்த நபரை சுட்டுக் வீழ்த்தியுள்ளார்.

சுட்டு வீழ்த்தப்பட்ட நபர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு குழு சென்ற பிறகு அவசர சேவைகள் வீட்டிற்குள் இருந்து 12 வயது சிறுவன், 44 வயது பெண் மற்றும் 30 வயது ஆண் ஆகிய 3 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

அத்துடன் வாசலில் காயங்களுடன் நின்ற 11 வயது சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிறுமியும் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதற்கிடையில் இந்த தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றியவர் 39 வயதான கோர்ட்னி கார்டன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணையை பொலிஸார் தொடங்கியுள்ளனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...