14 37
உலகம்செய்திகள்

பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து மீண்டும் வெளியேறிய அமெரிக்கா: ட்ரம்பின் முடிவு

Share

பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து மீண்டும் வெளியேறிய அமெரிக்கா: ட்ரம்பின் முடிவு

பாரீஸ் ஒப்பந்தம் என்னும் பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தத்திலிருந்து வெளியேற மீண்டும் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.

தான் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும், பல முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார் ட்ரம்ப்.

அவற்றில், பாரீஸ் ஒப்பந்தம் என்னும் பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவது தொடர்பான ஆவணமும் ஒன்று.

பாரிஸ் ஒப்பந்தம் என்பது காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்குச் சட்டப்பூர்வமாக கையொப்பமிட்டவர்களைக் கட்டுப்படுத்தும் ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.

2015 ஆம் ஆண்டு முதல் முறையாக, புவி வெப்பமடைதலை கட்டுப்படுத்தவும் அதன் தாக்கங்களை நிவர்த்தி செய்யவும் ஒரு பெரிய கூட்டு முயற்சிக்கு அரசாங்கங்கள் கூட்டாக ஒப்புக்கொண்டன.

ஆனால், ட்ரம்ப் 2017ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும், பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

2021ஆம் ஆண்டு ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும், அமெரிக்கா மீண்டும் பாரீஸ் ஒப்பந்தத்தில் இணைந்தது.

இந்நிலையில், தற்போது இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ட்ரம்ப், தான் பதவியேற்ற சிற்து நேரத்திலேயே, மீண்டும் பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவது தொடர்பான ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....