tamilni 181 scaled
உலகம்செய்திகள்

சிவப்பு கடலில் பதற்றம்! ஹவுதி ட்ரோன்களை சுட்டு வீழ்த்த அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா

Share

சிவப்பு கடலில் பதற்றம்! ஹவுதி ட்ரோன்களை சுட்டு வீழ்த்த அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா

ஏமன் கடல் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ட்ரோன்களை அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய படைகள் முறியடித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை சிவப்பு கடல் பகுதியில் சுற்றித் திரிந்த ஆளில்லா ட்ரோன் விமானங்களில் (UAVs) குறைந்தது 28 ட்ரோனகளை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.

வணிக கப்பலுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பெரிய தாக்குதல் குறித்து அறிந்த பிறகு, கூட்டணி படைகளுடன் இணைந்து பதிலடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.

மேலும் இந்த மோதலின் போது அமெரிக்க கப்பலுக்கு எத்தகைய பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், ஆனால் வணிக கப்பல் சேதம் குறித்து இன்னும் அறிக்கைகள் இல்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Propel Fortune என்ற வணிக கப்பலையும், சில அமெரிக்க ராணுவ கப்பலையும் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹவுதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிரித்தானிய பாதுகாப்பு துறை செயலர் Grant Shapps, ஹவுதி படைகளால் வெள்ளிக்கிழமை இரவு ஏவப்பட்ட இரண்டு ட்ரோன்கள் Royal Navy frigate HMS Richmond மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளர்.

அத்துடன், உயிர் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வழித்தட சுதந்திரத்திற்காக பிரித்தானியா மற்றும் அதன் கூட்டுப் படைகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அதே சமயம், பிரான்ஸின் போர் கப்பல்கள் மற்றும் ஜெட் விமானங்கள் இணைந்து, 4 ஹவுதி ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளன.

இவை Aden வளைகுடா பகுதியில் இழுத்து செல்லப்பட்ட ஐரோப்பிய கடற்படை கப்பல் மற்றும் சரக்கு கப்பலை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிரித்தானிய பாதுகாப்பு துறை செயலர் Grant Shapps, ஹவுதி படைகளால் வெள்ளிக்கிழமை இரவு ஏவப்பட்ட இரண்டு ட்ரோன்கள் Royal Navy frigate HMS Richmond மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளர்.

அத்துடன், உயிர் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வழித்தட சுதந்திரத்திற்காக பிரித்தானியா மற்றும் அதன் கூட்டுப் படைகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அதே சமயம், பிரான்ஸின் போர் கப்பல்கள் மற்றும் ஜெட் விமானங்கள் இணைந்து, 4 ஹவுதி ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளன.

இவை Aden வளைகுடா பகுதியில் இழுத்து செல்லப்பட்ட ஐரோப்பிய கடற்படை கப்பல் மற்றும் சரக்கு கப்பலை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாக பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
26 6990101d03ddb
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும்...

dailythanthi 2026 02 14 giawqio6 pul
செய்திகள்இந்தியா

புல்வாமா வீரர்களுக்கு 7-ம் ஆண்டு வீரவணக்கம்: நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற...

1763708534 drug 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதைப்பொருள் கும்பலுக்கு மரண அடி! – ஒரே நாளில் 820 பேர் கைது.

இலங்கை அரசாங்கம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னெடுத்து வரும் ‘நேஷன் யுனைடெட் – நேஷனல் டிரைவ்’...

images 14
செய்திகள்அரசியல்இலங்கை

நுரைச்சோலையில் பாரிய நிலக்கரி ஊழல்? – 5 கப்பல்களும் தரமற்றவை என சஜித் பிரேமதாச அதிரடி குற்றச்சாட்டு!

நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி...