tamilniv 2 scaled
உலகம்செய்திகள்

செங்கடல் பகுதியில் பதற்றம்: ஹவுதி ஏவுகணைகளை வீழ்த்திய அமெரிக்கா

Share

ஹவுதிகளால் ஏவப்பட்ட ஏவுகணையை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

யேமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் அமெரிக்க நாசகாரக் கப்பலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையை தமது போர் விமானம் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக செங்கடல் பகுதியில் பதற்றம் நீடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செங்கடலில் செல்லும் கப்பல்களை இலக்கு வைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தும் தாக்குதல்களால் செங்கடல் ஊடான கப்பல் போக்குவரத்து பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

காசா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், யேமனின்ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் பயணிக்கும் வணிகக் கப்பல்களை இலக்கு வைத்து தாக்கி வருகின்றனர்.

இதன் காரணமாக, அந்த தாக்குதல்களை தடுக்கும் வகையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா மற்றும் பிரித்தானியா தலைமையிலான கூட்டு இராணுவக் குழு தாக்குதல் நடத்தி வருகின்றது.

செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது நிறுத்தப்படாவிட்டால் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செங்கடலில் நிலைகொண்டிருந்த அமெரிக்க கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணையை செலுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், குறித்த ஏவுகணையை அமெரிக்க போர் விமானம் தாக்கி அழித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...