tamilni 333 scaled
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் 22 பேரை காவுகொண்ட துப்பாக்கி சூடு சம்பவம்

Share

அமெரிக்காவில் 22 பேரை காவுகொண்ட துப்பாக்கி சூடு சம்பவம்

அமெரிக்காவின் மெய்னே மாகாணத்தின் லூயிஸ்டன் நகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அதிரடியாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 22 பேர் உயிரிழந்ததோடு 60 பேர் காயமடைந்திருந்தனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய மர்ம நபரான ராபர்ட் கார்டு கையில் துப்பாக்கியை ஏந்தியபடி, சுடுவதற்கு தயாராக இருக்கும் காட்சியும் அந்த நபரின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

நகரின் பல்வேறு இடங்களில் அதிக அளவிலான துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளமையினால் பொதுமக்களை பாதுகாப்பாக இருக்கும்படி பொலிஸார் நேற்றிரவு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,

“துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம நபரான ராபர்ட் கார்டு என்பவரை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

அந்த நபர் ஆயுதங்களுடன் இருக்கலாம். ஆபத்து நிறைந்தவர் என்றும் தெரிகிறது. அவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாரை தொடர்பு கொள்ளும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்”என தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...