14 10
உலகம்செய்திகள்

ஈரானின் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலில் நிலைக்கொள்ள தயாராகும் அமெரிக்க படைகள்

Share

ஈரானின் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலில் நிலைக்கொள்ள தயாராகும் அமெரிக்க படைகள்

இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் முன்னோடியில்லாத தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டின் வான் பாதுகாப்பை வலுப்படுத்த அமெரிக்கா தமது துருப்புக்களை அனுப்பியுள்ளதாக பெண்டகன் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பில் இன்று பெண்டகன் வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்ட விடயம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ”டெர்மினல் ஹை-ஆல்டிடியூட் ஏரியா டிஃபென்ஸ் Terminal High-Altitude Area Defense (THA) படைப்பிரிவை மத்திய கிழக்கிற்கு அனுப்புவது இது முதல் முறை அல்ல என பென்டகனின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பேட்ரிக் ரைடர் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பேட்ரிக் ரைடரின் கூற்றுப்படி, THA படைப்பிரிவில் சுமார் 100 அமெரிக்க துருப்புக்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்படுகின்றன.

அமெரிக்க துருப்புக்கள் இஸ்ரேலுக்குள் நிலைநிறுத்தப்படுவது அரிது என்றாலும், ஏவுகணைகளை எதிர்க்கும் பாதுகாப்பு அமைப்பை இயக்குவதற்கான வழக்கமான எண்ணிக்கையிலான துருப்புக்களே அனுப்பப்படுகிறது என விளக்கமளித்துள்ளார்.

முன்னதாக இந்த ஆண்டு ஏப்ரல் 13 மற்றும் ஒக்டோபர் 1 அன்று ஈரான் இஸ்ரேலின் மீது முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தியிருந்தது.

இதில் அக்டோபர் 1 அன்று ஈரானின் தாக்குதலுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து அமெரிக்காவுடன் இஸ்ரேல் ஆலோசனை நடத்தி வருகிறது.

மேலும் ஈரானிய அணுசக்தி தளங்கள் அல்லது எண்ணெய் உற்பத்தி பகுதிகளை இஸ்ரேல் குறிவைப்பதை அமெரிக்க அதிகாரிகள் விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதன்படி ஒக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் இஸ்ரேலை தாக்கியதில் இருந்து அமெரிக்க இராணுவம் மத்திய கிழக்கில் தனது இருப்பை கணிசமாக அதிகரித்துள்ளது.

பிராந்தியம் முழுவதும் தனது வான் பாதுகாப்பை அமெரிக்கா பலப்படுத்தியுள்ளது. கிழக்கு மத்தியதரைக் கடல், செங்கடல் மற்றும் அரேபிய கடலுக்கு கூடுதல் போர்க்கப்பல்கள் மற்றும் விமான தாங்கி கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளது.

மேலும் சமீபத்தில் சைப்ரஸுக்கும் கூடுதல் துருப்புக்களை அனுப்பியது.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...

12879419
செய்திகள்அரசியல்இலங்கை

பெருந்தோட்டத் தொழிலாளர் நாளாந்தக் கொடுப்பனவு ரூ. 1,550 ஆக உயர்வு: சுகாதார மேம்பாட்டிற்கு ரூ. 31,000 மில்லியன் ஒதுக்கீடு – ஜனாதிபதி அறிவிப்பு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தக் கொடுப்பனவை அதிகரிப்பது மற்றும் சுகாதாரத் துறையில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்வது குறித்து...

STK022 ELON MUSK CVIRGINIA F
செய்திகள்உலகம்

உலகின் முதல் ட்ரில்லியன் டாலர் பணக்காரராகும் வாய்ப்பு: எலான் மஸ்க்கின் ரூ. 1 ட்ரில்லியன் ஊதியக் கோரிக்கைக்கு டெஸ்லா பங்குதாரர்கள் ஒப்புதல்!

உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க், தனக்கு 1 ட்ரில்லியன் டாலர்...

digital ID
செய்திகள்இலங்கை

டிஜிட்டல் பொருளாதாரம்: 2026-ல் ரூ. 25,500 மில்லியன் முதலீடு; மார்ச் 2026-ல் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகம்!

நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து ஜனாதிபதி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக...