14 10
உலகம்செய்திகள்

ஈரானின் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலில் நிலைக்கொள்ள தயாராகும் அமெரிக்க படைகள்

Share

ஈரானின் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலில் நிலைக்கொள்ள தயாராகும் அமெரிக்க படைகள்

இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் முன்னோடியில்லாத தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டின் வான் பாதுகாப்பை வலுப்படுத்த அமெரிக்கா தமது துருப்புக்களை அனுப்பியுள்ளதாக பெண்டகன் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பில் இன்று பெண்டகன் வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்ட விடயம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ”டெர்மினல் ஹை-ஆல்டிடியூட் ஏரியா டிஃபென்ஸ் Terminal High-Altitude Area Defense (THA) படைப்பிரிவை மத்திய கிழக்கிற்கு அனுப்புவது இது முதல் முறை அல்ல என பென்டகனின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பேட்ரிக் ரைடர் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பேட்ரிக் ரைடரின் கூற்றுப்படி, THA படைப்பிரிவில் சுமார் 100 அமெரிக்க துருப்புக்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்படுகின்றன.

அமெரிக்க துருப்புக்கள் இஸ்ரேலுக்குள் நிலைநிறுத்தப்படுவது அரிது என்றாலும், ஏவுகணைகளை எதிர்க்கும் பாதுகாப்பு அமைப்பை இயக்குவதற்கான வழக்கமான எண்ணிக்கையிலான துருப்புக்களே அனுப்பப்படுகிறது என விளக்கமளித்துள்ளார்.

முன்னதாக இந்த ஆண்டு ஏப்ரல் 13 மற்றும் ஒக்டோபர் 1 அன்று ஈரான் இஸ்ரேலின் மீது முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தியிருந்தது.

இதில் அக்டோபர் 1 அன்று ஈரானின் தாக்குதலுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து அமெரிக்காவுடன் இஸ்ரேல் ஆலோசனை நடத்தி வருகிறது.

மேலும் ஈரானிய அணுசக்தி தளங்கள் அல்லது எண்ணெய் உற்பத்தி பகுதிகளை இஸ்ரேல் குறிவைப்பதை அமெரிக்க அதிகாரிகள் விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதன்படி ஒக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் இஸ்ரேலை தாக்கியதில் இருந்து அமெரிக்க இராணுவம் மத்திய கிழக்கில் தனது இருப்பை கணிசமாக அதிகரித்துள்ளது.

பிராந்தியம் முழுவதும் தனது வான் பாதுகாப்பை அமெரிக்கா பலப்படுத்தியுள்ளது. கிழக்கு மத்தியதரைக் கடல், செங்கடல் மற்றும் அரேபிய கடலுக்கு கூடுதல் போர்க்கப்பல்கள் மற்றும் விமான தாங்கி கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளது.

மேலும் சமீபத்தில் சைப்ரஸுக்கும் கூடுதல் துருப்புக்களை அனுப்பியது.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...