rtjy 260 scaled
உலகம்செய்திகள்

காசாவிற்கு உதவிகளை அதிகரிக்க அமெரிக்கா நடவடிக்கை

Share

காசாவிற்கு உதவிகளை அதிகரிக்க அமெரிக்கா நடவடிக்கை

ஹமாஸ் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் நீட்டித்து வரும் நிலையில், காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.

உணவு, எரிபொருள் மற்றும் மருத்துவப் பொருட்கள் உட்பட காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

மூன்று நிவாரண விமானங்களில் உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதோடு இவற்றில் முதலாவது தொகுதி இந்த வாரம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குளிர்காலத்தில் பாலஸ்தீனியர்கள் உயிர்வாழ உதவும் பொருட்கள் உட்பட பல பொருட்களை செவ்வாய்க்கிழமை வடக்கு சினாய் மற்றும் எகிப்துக்கு அமெரிக்க இராணுவம் அனுப்பும் என்று மூத்த நிர்வாக அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

இது தவிர கூடுதல் பொருட்கள் மற்றும் உதவிகள் வரும் நாட்களில் அனுப்பப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

காசாவில் உள்ள 2.3 மில்லியன் பாலஸ்தீனியர்களுக்கு கூடுதல் உதவிகளை எப்படி அனுமதிப்பது என்பது குறித்து இஸ்ரேல் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

பல பாலஸ்தீனர்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தனர். சுமார் 80% பேர் தெற்கு மற்றும் மத்திய காசாவில் நிலையான வாழ்க்கை நிலைமைகளை எதிர்கொள்கின்றனர்.

பணயக்கைதிகளின் விடுதலைக்கும் மனிதாபிமான உதவிக்கும் தொடர்பில்லை என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, 58 பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது. அவர்களில் 40 பேர் இஸ்ரேலியர்கள். இதற்கு ஈடாக இஸ்ரேல் இதுவரை சுமார் 150 பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2Fka10y8tLGVxpVydY2Opn
செய்திகள்உலகம்

பிரித்தானிய நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்டம்: பங்குச் சந்தை முதலீட்டை ஊக்குவிக்கச் சேமிப்புக் கணக்கு வரம்பு குறைய வாய்ப்பு!

பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) நாளைய தினம் (நவம்பர் 26) தனது வருடாந்தர...

articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...