மனைவியை துண்டு துண்டாக வெட்டி 3 சூட்கேஸில் அடைத்த கணவன்
உலகம்செய்திகள்

மனைவியை துண்டு துண்டாக வெட்டி 3 சூட்கேஸில் அடைத்த கணவன்

Share

மனைவியை துண்டு துண்டாக வெட்டி 3 சூட்கேஸில் அடைத்த கணவன்

அமெரிக்காவில் மனைவியை கொன்று துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்த கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் டெல்ரே கடற்கரையில் பாம் டிரெயில் அருகே உள்ள கடலோர நீர்வழி பாதையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் கிடப்பதாக  கடந்த மாதம் நபர் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸார் சந்தேகத்திற்குரிய வகையில் கிடந்த 3  சூட்கேசை திறந்து பார்த்த போது, அதில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு இருந்த மனித உடலை கண்டுபிடித்தனர்.

அத்துடன் நூலில் கட்டப்பட்டு ஆண் ஒருவரின் பெல்ட்-ஆல் சுற்றப்பட்ட பை ஒன்றையும் பொலிஸார் மீட்டனர். அதில் துப்பாக்கியால் சுடப்பட்ட பெண் ஒருவரின் தலை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் 78 வயதுடைய வில்லியம் லோவ் என்பவரின் வீட்டை பொலிஸார் சோதனை செய்தனர்.

அப்போது அவரது வீட்டில் படுக்கையறை, ஹால், குளியறை முழுவதும் ரத்தக் கறை படிந்து இருப்பதையும், வீட்டில் இருந்த செயின்சா இரத்தக் கறையுடன் மனித எச்சங்கள் ஓட்டி இருப்பதையும் கண்டுபிடித்தனர்.

இந்நிலையில் வில்லியம் லோவ் என்ற 78 வயதுடைய நபர் அவருடைய 80 வயதுடைய மனைவியை கொன்ற குற்றத்துக்காகவும், உடலை துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்காகவும்  அவரை பொலிஸார் கைது செய்தனர்.

இதனிடையே உடல்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் தலையில் சுடப்பட்டு இறந்து இருப்பதாகவும், பின்னர் துண்டு துண்டாக வெட்டப்பட்டு இருப்

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 690749f63e1f3
இலங்கைசெய்திகள்

காவல்துறை உயர் மட்டத்தில் மாற்றம்: மூத்த டிஐஜி-களின் பதவிகள் இடமாற்றம் – நிர்வாகப் பிரிவில் சஞ்சீவ தர்மரத்ன நியமனம்!

காவல்துறையில் உள்ள மிக மூத்த அதிகாரிகளின் பதவிகள் மற்றும் கடமைகள் மாற்றியமைக்கப்படவுள்ளதாகக் காவல்துறை தலைமையக வட்டாரங்கள்...

image 870x 68edd5575b92d
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா செவ்வந்தியின் ‘போலி கடவுச்சீட்டு நாடகம்’ – இரட்டிப்புக் கோப்பு உருவாக்கப்பட்டது அம்பலம்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பின்னணியில் இருந்ததாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட முத்திரைப் பிழையான...

caption 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைப்பு: 6 உண்டியல்களில் இருந்து பெருந்தொகை பணம் கொள்ளை!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு...

102018246 f892fa86 2cbc 44fd b1e2 ac87ac946aba
செய்திகள்இலங்கை

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கோரி ஞானசார தேரர் கோரிக்கை: ‘பாதாள உலகக் குழுவினர் சதி’ என குற்றச்சாட்டு!

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா...