tamilni 132 scaled
உலகம்செய்திகள்

சிரியா மீது அமெரிக்கா கடும் விமானத் தாக்குதல்

Share

சிரியா மீது அமெரிக்கா கடும் விமானத் தாக்குதல்

சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் அமைப்புக்களின் ஆயுதக் கிடங்கு மீது அமெரிக்கா வான்தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் லாய்டு ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

இரண்டு அமெரிக்க எஃப் -15 போர் விமானங்கள் சிரியாவில் குண்டுமழை பொழிந்ததாகவும், தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள பெரும்பாலான நாடுகளில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய அமைப்புக்கள் செயல்பட்டு வருகின்றன.

அமெரிக்க வீரர்கள் தங்கியிருக்கும் வீடுகள் மற்றும் இராணுவ நிலைகள் மீது ஈரான் ஆதரவு அமைப்பினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

தாக்குதலுக்கு அமெரிக்காவும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் அமெரிக்கா நடத்திய வான்தாக்குதல் 9 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...