2 18
உலகம்செய்திகள்

அணுதளங்களில் மீண்டும் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்த ஈரான்!

Share

அமெரிக்காவால் தாக்கப்பட்ட ஃபோர்டோ அணுசக்தி மையத்தில் மீண்டும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செய்மதி படங்களில் மண்ணை அகற்றும் இயந்திரங்கள், சுரங்கப்பாதைகள் அருகே நடவடிக்கைகள், மற்றும் பணிகளுக்காக அமைக்கப்பட்ட கூடாரங்கள் ஆகியவை காணப்பட்டுள்ள நிலையில் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

ஈரானின் ஃபோர்டோ (Fordow) அணுசக்தி மையம், தெஹ்ரானுக்கு தெற்கே சுமார் 100 கி.மீ. தொலைவில், மலைப்பகுதியில் நிலத்தடியில் அமைந்துள்ள முக்கியமான யுரேனியம் செறிவூட்டல் தளமாகும்.

2025 ஜூன் 22 அன்று, அமெரிக்காவின் B-2 ஸ்டெல்த் விமானங்கள் மற்றும் GBU-57 பங்கர் பஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தி ஃபோர்டோ உள்ளிட்ட மூன்று அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டங்களை குறிவைத்து நடத்தப்பட்டவையாகும், ஆனால் சேதத்தின் அளவு குறித்து தெளிவான தகவல்கள் இல்லை.

இந்நிலையில் அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பிறகு ஈரான் தனது அணுசக்தி தளத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குறித்த செய்மதி படங்கள் சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த மீள் கட்டுமான முயற்சிகள், ஈரானின் அணுசக்தி திட்டங்களை மீண்டும் தொடர விரும்புவதாகவும், தாக்குதல்களால் தடைபடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தெஹ்ரான் செயல்படுவதாகவும் கருதப்படுகிறது.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...