13 23
உலகம்செய்திகள்

தாய்வானுக்கு பைடன் வழங்கிய உறுதி

Share

தாய்வானுக்கு பைடன் வழங்கிய உறுதி

அமெரிக்கா (US), தாய்வானுக்கு (Taiwan) தனது 571 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உதவியை வழங்குவதை உறுதி செய்துள்ளது.

இந்நிலையில், தாய்வானின் பாதுகாப்பு அமைச்சகம் அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதத்திற்கு நன்றி தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான அறிக்கை ஒன்றில், தாய்வானின் ஜலசந்தியில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இருநாட்டின் தரப்பும் தொடர்ந்து நெருக்கமாக செயற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, தாய்வானுக்கான பாதுகாப்பு உதவிக்கு ஒப்புதல் வழங்குவதாக கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அதேநேரம், அதன் தீவுக்கும் சுமார் 265 மில்லியன் டொலர் மதிப்புள்ள இராணுவ உபகரணங்களை விற்பனை செய்வதற்கான சாத்தியக்கூறுகளையும் அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ளார்.

தாய்வானுக்கு எதிரான இராணுவ அழுத்தத்தை சீனா அதிகரித்துள்ளது, இதில் தீவுக்கு அருகிலுள்ள தினசரி இராணுவ நடவடிக்கைகள் மற்றும் இந்த ஆண்டு இரண்டு சுற்று போர் பயிற்சிகளும் அடங்குகின்றன.

தாய்வானைச் சுற்றியுள்ள கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களிலும் மிகப்பெரிய கடற்படைப் படைகளை குவிப்பதாக சீனா அறிவித்திருந்தமையினால் தாய்வான் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...