4 17 scaled
உலகம்

போர்க்களத்தில் ரோபோ நாய்கள்.. உக்ரைன் வெளியிட்டுள்ள புதிய ஆயுதம்

Share

போர்க்களத்தில் ரோபோ நாய்கள்.. உக்ரைன் வெளியிட்டுள்ள புதிய ஆயுதம்

போர் நெருக்கடியில் சிக்கியுள்ள உக்ரைன், புதிய ஆயுதத்தை வெளியிட்டுள்ளது.

ராணுவத்தில் கடுமையான ஆள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் உக்ரைன், ‘BAD One’ என்ற ரோபோ நாயை உருவாக்கியுள்ளது.

இவை போர்க்களத்திலும், ராணுவ நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், விரைவில் ராணுவத்தில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இராணுவக் கண்காணிப்பு மற்றும் கண்ணிவெடிகளைக் கண்டறியும் அதிக ஆபத்துள்ள நடவடிக்கைகளில் BAD One-கள் பயன்படுத்தப் போவதாக அறியப்படுகிறது.

சமீபத்தில் உக்ரைனின் ஒரு அறியப்படாத பகுதியில் நடந்த செயல் விளக்கத்தில், இந்த ரோபோ நாய் அதன் ஆபரேட்டர் அனுப்பிய கட்டளைகளின்படி எழுந்து நின்று, குனிந்து, ஓடி, குதித்து காட்டியது.

செயல்நமுறை விளக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட இந்த ரோபோவில் சுமார் இரண்டு மணி நேரம் மின்சாரம் வழங்கும் பேட்டரி பொருத்தப்பட்டிருந்தது.

அவை ஏழு கிலோ வெடிமருந்துகள் அல்லது ஆயுதங்கள் மற்றும் போர்க்களத்தில் காயமடைந்த சிப்பாயின் மருத்துவப் பெட்டியை எடுத்துச் செல்ல முடியும்.

Bad One ரோபோ நாயின் மேம்படுத்தப்பட்ட மொடலாக ‘BAD Two’ எனும் மற்றொரு ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக அதன் மாதிரியைக் காட்ட முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...

9 2
உலகம்செய்திகள்

ஈரானின் அதிரடி அறிவிப்பு! அடுத்த நாளே நிகழ்ந்துள்ள பாரிய மாற்றம்

ஈரானின் ஹார்முஸ் நீரிணையை மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக, ஈரான் நேற்று அறிவித்ததை தொடர்ந்து, இன்றைய தினம்...

10 3
உலகம்செய்திகள்

ஈரானின் அணு வசதி சேதம்: செயற்கைக்கோள் படங்களின் அதிர்ச்சி வெளிப்பாடு

ஈரானின் ஃபோர்டோ அணுமின் நிலையத்தின் மீதான அமெரிக்கத் தாக்குதலின் ஆழமாகப் புதைக்கப்பட்ட தளமும் அது வைத்திருந்த...

5 8
உலகம்செய்திகள்

பதிலடி தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்! ஈரானின் விமான நிலையங்கள் மீது சரமாரியான தாக்குதல்

ஈரானில் விமான நிலையங்களை தாக்கி F-14 போர் விமானம் மற்றும் ஏவுகணை களஞ்சியங்களை அழித்துள்ளதாக இஸ்ரேல்...