24 669195c5f3528
உலகம்செய்திகள்

தானியங்களைக் கொள்ளையிட்டு தப்ப முயன்ற வெளிநாட்டு சரக்குக் கப்பலை கைப்பற்றிய உக்ரைன்

Share

தானியங்களைக் கொள்ளையிட்டு தப்ப முயன்ற வெளிநாட்டு சரக்குக் கப்பலை கைப்பற்றிய உக்ரைன்

ரஷ்யா(Russia) ஏற்றுமதி செய்த உக்ரைனுக்கு சொந்தமான தானியங்களுடன் வெளியேற முயன்ற வெளிநாட்டு சரக்குக் கப்பல் ஒன்றை அதிரடியாகக் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட கிரிமியன் தீபகற்பத்தில் இருந்து உக்ரேனிய தானியங்களை அந்த கப்பல் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ததாக கூறப்படுகிறது.

இதன்போது கப்பலின் மாலுமியையும் உக்ரைன் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கப்பலானது ஏற்கனவே ஒருமுறை கிரிமியா பகுதியில் இருந்து தானியங்களுடன் வெளியேறியுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Usko Mfu என்ற அந்த கப்பல் மற்றும் அதன் மாலுமிகள் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்குள் நுழைவதற்கான விதிகளை மீறியதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும், அஜர்பைஜான் நாட்டவர் என அடையாளம் காணப்பட்ட அந்த மாலுமி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் , மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தாலும், இதுவரை இந்த விவகாரத்தில் முறையான தீர்வு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...