ஐரோப்பிய நாடுகள் போரினை ஒருபோதும் மாற்றாது: புடின் அதிரடி
உலகம்செய்திகள்

ஐரோப்பிய நாடுகள் போரினை ஒருபோதும் மாற்றாது: புடின் அதிரடி

Share

ஐரோப்பிய நாடுகள் போரினை ஒருபோதும் மாற்றாது: புடின் அதிரடி

உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் வழங்கும் ஆயுதங்களால் போரின் போக்கு மாறப் போவதில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சிமாநாடு சமீபத்தில் இடம்பெற்றது.

இதில், உக்ரைன் விவகாரம் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

இந்நிலையில், வில்னியஸ் மாநாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள புடின் , “நேட்டோவில் உக்ரைன் உறுப்பினராவதன் மூலம் ரஷ்யாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் அதே வேளையில் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை வழங்குவது என்பது உலகளாவிய பதட்டங்களை மேலும் அதிகரித்து மோதலை நீட்டிக்கும்.

250 கிமீ (155 மைல்கள்) பயணிக்கக்கூடிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவதற்கு பிரான்ஸ் முடிவுச் செய்துள்ளது.

அந்த ஆயுதங்கள் சேதத்தை ஏற்படுத்தும். ஆனால் அவை போரின் போக்கை மாற்ற போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

நேட்டோ மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேசும்போது, “ புடின் உக்ரைன் போரில் தோற்றுவிட்டார்” என்று விமர்சித்திருந்தார். இந்த நிலையில் இந்த கருத்தை ஜனாதிபதி புடின் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியிடம், உக்ரைனுக்கு நீண்டகால பாதுகாப்பு வழங்குவதற்கான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.

ஆனால், எப்போது நேட்டோவில் உக்ரைன் இணையும் என்பது குறித்து நேட்டோ தெரிவிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் குறித்த மாநாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்யா, பனிப்போர் காலத் திட்டங்களுக்கு ஐரோப்பிய நாடுகள் திரும்பியுள்ளன என்பதை இந்த மாநாடு நிரூபிக்கிறது என்று விமர்சித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 9a837bd90e
செய்திகள்இலங்கை

பேராதனை பல்கலைக்கழகத்தில் பரபரப்பு: பெண்கள் விடுதி குளியலறையில் ‘நஞ்சுக்கொடி’ கண்டெடுக்கப்பட்ட விவகாரம் – பொலிஸ் விசாரணை ஆரம்பம்!

பேராதனை பல்கலைக்கழகத்தின் விஜயவர்த்தன பெண்கள் விடுதியில் உள்ள ஒரு குளியலறையில், ஒரு நஞ்சுக்கொடியின் (Placenta) பகுதி...

MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...