rf scaled
உலகம்செய்திகள்

8 வருடங்களுக்கு பிறகு போய்கோ கோபுரங்களை ரஷ்யாவிடம் இருந்து மீட்ட உக்ரைன்

Share

8 வருடங்களுக்கு பிறகு போய்கோ கோபுரங்களை ரஷ்யாவிடம் இருந்து மீட்ட உக்ரைன்

கருங்கடலில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த போய்கோ கோபுரங்களை உக்ரைன் தற்போது தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

கிட்டத்தட்ட 19 மாதங்களாக உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடைபெற்று வரும் நிலையில், ஆரம்ப கட்டங்களில் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அத்துடன் உக்ரைன் தென்கிழக்கு பகுதியின் 4 முக்கிய பிராந்தியங்களை தங்கள் நாட்டின் ஒற்றை அங்கமாகவும் ரஷ்யா அறிவித்தது.

இருப்பினும் ரஷ்ய படை கட்டுப்பாட்டில் வைத்து இருந்த பல பகுதிகளை உக்ரைனிய படைகள் தற்போது எதிர் தாக்குதல் நடத்தி மீண்டும் கைப்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கருங்கடலில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த போய்கோ கோபுரங்களை(Boiko towers) தற்போது தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உக்ரைன் கொண்டுவந்துள்ளது.

இந்த போய்கோ கோபுரங்கள் கடந்த 2015ம் ஆண்டு ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டது. அத்துடன் இதனை ரஷ்யா அவர்களது ராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தி வந்தனர்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...