ஹீரோக்களுக்கு உக்ரைன் நன்றியுள்ளதாக இருக்கும் - ஜெலென்ஸ்கி
உலகம்செய்திகள்

ஹீரோக்களுக்கு உக்ரைன் நன்றியுள்ளதாக இருக்கும் – ஜெலென்ஸ்கி

Share

ஹீரோக்களுக்கு உக்ரைன் நன்றியுள்ளதாக இருக்கும் – ஜெலென்ஸ்கி

உக்ரைனின் சுதந்திரம், உரிமைக்காக தங்கள் வீரர்கள் போராடுவதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பதிவிட்டுள்ளார்.

லிதுவேனியாவில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கலந்துகொண்டார்.

அங்கு, ‘உக்ரைன் நேட்டோவில் இருக்குமா என்பது பற்றிய சந்தேகங்கள் அல்லது தெளிவின்மையை நாங்கள் நீக்கிவிட்டோம். அது இருக்கும்’ என ஜெலென்ஸ்கி கூறிய அறிக்கைகளை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

அதேபோல் வியாழன் அன்று வெளியிட்ட கருத்துக்களில், நேட்டோ உச்சிமாநாடு உக்ரைனுக்கு முன்னெப்போதும் இல்லாத பாதுகாப்பு அடித்தளத்தை அளித்து, கூட்டணியில் அங்கத்துவம் பெறுவதற்கான பாதையில் வைத்தது என்றார் ஜெலென்ஸ்கி.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் உக்ரைன் இராணுவ வீரர்கள், ஏவுகணைகள் ஏவுதல் உள்ளிட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ள ஜெலென்ஸ்கி,

‘உக்ரைனின் சுதந்திரத்திற்காக, கண்ணியத்திற்காக, மக்கள் அனைவரது வாழ்வதற்கான உரிமைக்காக நாங்கள் போராடுகிறோம். எங்கள் வீரர்களுக்கு, எங்கள் ஹீரோக்களுக்கு, போராடும் அனைவருக்காகவும் உக்ரைன் நன்றியுள்ளதாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பாக ஜெலென்ஸ்கி தனது வீடியோவில், சுதந்திரம் பெற்றதில் இருந்து முதல் முறையாக உக்ரைன் நேட்டோவுக்கான பாதையில் பாதுகாப்புக்கான அடித்தளத்தை நாங்கள் நிறுவியுள்ளோம் என கூறியிருந்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...