ஹீரோக்களுக்கு உக்ரைன் நன்றியுள்ளதாக இருக்கும் - ஜெலென்ஸ்கி
உலகம்செய்திகள்

ஹீரோக்களுக்கு உக்ரைன் நன்றியுள்ளதாக இருக்கும் – ஜெலென்ஸ்கி

Share

ஹீரோக்களுக்கு உக்ரைன் நன்றியுள்ளதாக இருக்கும் – ஜெலென்ஸ்கி

உக்ரைனின் சுதந்திரம், உரிமைக்காக தங்கள் வீரர்கள் போராடுவதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பதிவிட்டுள்ளார்.

லிதுவேனியாவில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கலந்துகொண்டார்.

அங்கு, ‘உக்ரைன் நேட்டோவில் இருக்குமா என்பது பற்றிய சந்தேகங்கள் அல்லது தெளிவின்மையை நாங்கள் நீக்கிவிட்டோம். அது இருக்கும்’ என ஜெலென்ஸ்கி கூறிய அறிக்கைகளை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

அதேபோல் வியாழன் அன்று வெளியிட்ட கருத்துக்களில், நேட்டோ உச்சிமாநாடு உக்ரைனுக்கு முன்னெப்போதும் இல்லாத பாதுகாப்பு அடித்தளத்தை அளித்து, கூட்டணியில் அங்கத்துவம் பெறுவதற்கான பாதையில் வைத்தது என்றார் ஜெலென்ஸ்கி.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் உக்ரைன் இராணுவ வீரர்கள், ஏவுகணைகள் ஏவுதல் உள்ளிட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ள ஜெலென்ஸ்கி,

‘உக்ரைனின் சுதந்திரத்திற்காக, கண்ணியத்திற்காக, மக்கள் அனைவரது வாழ்வதற்கான உரிமைக்காக நாங்கள் போராடுகிறோம். எங்கள் வீரர்களுக்கு, எங்கள் ஹீரோக்களுக்கு, போராடும் அனைவருக்காகவும் உக்ரைன் நன்றியுள்ளதாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பாக ஜெலென்ஸ்கி தனது வீடியோவில், சுதந்திரம் பெற்றதில் இருந்து முதல் முறையாக உக்ரைன் நேட்டோவுக்கான பாதையில் பாதுகாப்புக்கான அடித்தளத்தை நாங்கள் நிறுவியுள்ளோம் என கூறியிருந்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1036524 cigar
செய்திகள்இலங்கை

அதிக ஆண்கள் சிகரெட் புகைக்கும் நாடுகள்: 70.5% உடன் இந்தோனேசியா முதலிடம்; இலங்கை 8வது இடத்தில்!

அதிக ஆண்கள் சிகரெட் புகைக்கும் தரவரிசைப் பட்டியலின் முதலிடத்தில் இந்தோனேசியா உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இது...

MediaFile 2
செய்திகள்இந்தியா

நிகழ்நிலை சூதாட்ட செயலி வழக்கு: சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் ரூ. 11 கோடி சொத்துகள் முடக்கம்!

ஒரு குறிப்பிட்ட நிகழ்நிலை சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்...

25 690cc39f76f96
செய்திகள்இந்தியா

மாத்தறை வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளர் நவம்பர் 28 அன்று தெரிவு: வர்த்தமானி வெளியீடு!

மாத்தறை, வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளர் (தலைவர்) எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி தெரிவு...

24 6718a970f1422
செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு தாழங்குடாவில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதல்: சஹ்ரான் குழுவின் வெடிகுண்டு சோதனை நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் பரபரப்பு!

மட்டக்களப்பு, தாழங்குடா பகுதியில் சஹ்ரான் குழுவினரால் வெடிகுண்டுச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இடத்தை அண்மித்த ஒரு...